சனி, 6 ஏப்ரல், 2019

உடுக்கு அடிப்பவர்களே



உடுக்கு அடிப்பவர்களே!
========================================================ருத்ரா


இந்திராகாந்தியின் மரணத்தின் போது
அந்த எரியூட்டு நிகழ்வே
அவர் இஸ்லாமியர் இல்லை
என்று நிரூபித்திருக்கிறது.
இருப்பினும் விடாப்பிடியாய்
பாருங்கள்
ராஜிவ் காந்தி வழி படும் முறையை.
ஃபெரோஷ் காந்தி ஒரு பார்சி.
பார்சிக்கள் முஸ்லீம்கள் என்று
இந்த சங்கிகள் சாதிக்கின்றனர்.
அதனால் அவரும் அவர் மகன்களும்
முஸ்லீம்கள் தான்
என்று தமுக்கு அடிக்கின்றனர்.

இப்போது அடிப்படையான
ஒரு கேள்விக்கு வருவோம்.

பார்ஸி முஸ்லீம் என்றால்
பார்சியின்
அவெஸ்தா மொழிப்பாடல் தான்
ரிக் வேதமாயிற்று.
இது தான் உங்கள் இந்துத்துவாவுக்கு
மூலம் என்றால்
நீங்களே அந்த‌
"அடிப்படை இஸ்லாமிய" வாதிகள் தானே.
நீங்கள் நமஹ என்கிறீர்கள்
அவர்கள் நமாஸ் சொல்கிறார்கள்.
மதவெறியை கொண்டு
உடுக்கு அடிப்பவர்களே
உங்கள் துடுக்குத்தனத்தையெல்லாம்
தூர வைத்து விட்டு
"தமஸோ மாம் ஜோதிர் கமய"
என்ற‌
ஒரு மானிட வெளிச்சத்துக்கு வாருங்கள்.
இருண்டகாலம் நோக்கி ஓடும்
உங்கள் அறியாமையை அகற்ற‌
வழி தேடுங்கள்.
உலகப்பொது மானிடம் எனும்
சிவப்பு ரத்தத்தை
உங்களுக்குள் பாய்ச்சிக்கொண்டு
குறுகிய உணர்வுகளின்
கருப்பு ரத்தத்தை
வெளியேற்றிக்கொள்ளுங்கள்.

ஓம்! ஷாந்தி..ஷாந்தி ஷாந்தி ஹி..

===================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக