திங்கள், 15 ஏப்ரல், 2019

கல்லைக்கண்டால் நாயைக்காணோம் ........

கல்லைக்கண்டால் நாயைக்காணோம் ........
=========================================================ருத்ரா


கல்லும் இல்லை
நாயும் இல்லை இங்கு.
முன்னது பொருள் முதல் வாதம்.
பின்னது கருத்து முதல் வாதம்.
இதைதான்
ஒரு சித்தன் பாடினான்
நட்டக்கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே...
என்று.
நாமும் தான்
அந்த நள்ளிரவு முதல்
தேடிக்கொண்டிருக்கிறோம்.
வெள்ளையன் இருந்தான்
கருப்பன் இல்லை..
அதாவது
காலனி ஆதிக்கம் மட்டுமே இருந்தது.
மக்கள் இல்லை.
சாதிகளாய் மதங்களாய்
தெருப்புழுதியாய்
கிடந்தனர்
ஒரு வழியாய் கருப்பன் கையில்
ஓட்டு வந்தது.
எண்ணி முடித்தபின்
எப்படி அந்த
உள் நாட்டு வெள்ளையன் வந்தான்?
கடவுளின் புத்திரன் என்று
அவனே மணியடித்துக்கொண்டான்.
மூவர்ணத்தில்
நான்கு வர்ணம் இருந்தது.
இன்னும் மண்ணின் அடியில்
பஞ்ச(ம) வர்ணம்...
மனிதனின் புத்திரர்கள்
மீண்டும் மண் புழுக்களாய்....
ஆம்..
கல்லைக்கண்டால்
நாயைக்காணோம் ..
"மரத்தில் மறைந்தது மாமத யானை.
"மதத்தில் மறைந்தது மாமத யானை."
பலம்பொருந்திய ஜனநாயக யானை
காகிதச்சீட்டில் மறைந்தது.
கணினிபொறிக்குள் மறைந்தது.

====================================================









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக