செவ்வாய், 9 ஏப்ரல், 2019

ரஜனியின் "ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்"

ரஜனியின் "ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்"
=================================================ருத்ரா


அன்று
எப்போதோ
ஒரு கோபத்தில்
ரஜனி அவர்கள்
சொன்னதால் தான்
அந்த வெற்றிக்கூட்டணி
ஆட்சியைப்பிடித்தது
என்று
"அந்த வாய்ஸ்" பற்றி
இன்றும்
அது போல் இது என்று
"வாய்ஸ்" புராணங்களை
ஊடகங்கள்
ஊற்றி ஊற்றி
கழுவிக்கொண்டிருக்கின்றன.

அந்த வாய்ஸ் நான் கொடுத்ததே
தப்பு என்றும்
ஒரு வாய்ஸ் வந்ததே.
அப்போது தான் தெரிந்தது
அவர் குரலுக்குள் ஒரு குரலாய்
அவருக்கு ஒருவர்
"டப்பிங்" கொடுக்கப்போகிறார்
என்று.

ஆம்.
இது வெறும் "ஹெச் எம் வி" எனும்
"ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்" தான்.
பஜகவின் நதி நீர் இணைப்பு ஆணயம்
வந்து விட்டால்
இந்தியாவின் பாதி வறுமைப் பிரச்னை
தீர்ந்து விடும்.
அதனால் அதை நான் வரவேற்கிறேன்
என்று
"ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்" ஒலித்தட்டு
ஓட்டுகளுக்காக‌
சந்து பொந்துகள் எல்லாம்
ஒலிக்கப்போகிறது.
இன்றைய ஆட்சியில் இவர்கள்
காவிரியை தமிழ்நாட்டுக்கு தரவிடாமல்
எப்படியெல்லாம்
"பகீரத"ப்பிரயத்தனங்கள்
செய்தார்கள் என்பதை மறந்து
மீண்டும் "பகீரத் யோஜனா" பற்றி
"புராணத்தனமாய்"
"வாய்ஸ்" கொடுக்கப்பட்டிருக்கிறதே.
அப்படியென்றால்
அது "ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்" தானே.
தொலைக்காட்சி ஊடகங்களே!
இன்றே கட்டம் கட்டி
நாலு பேரை உட்காரவைத்து
அந்த "சங்கல்ப பத்திர"த்தை
எதிர்ப்பது போல் எதிர்த்து
ஒரு மகா மகா விளம்பர வியூகத்தை
நிகழ்த்துவீர்கள்.

என்ன செய்வது?
"பிள்ளைப்பூச்சியை மடியில் கட்டிக்கொண்டு
புராணம் கேட்பது" போல்
என்று "குலதெய்வம்" படத்தில்
எஸ் எஸ் ஆர் ஒரு பிரபலமான‌
பாட்டு பாடியிருக்கிறார்.
அது போல் இந்த தேர்தல்
நம்மையெல்லாம்
"புரணாங்களை மடியில் கட்டிவைத்துக்கொண்டு"
ஜனநாயகத்தை"
தூக்கி நிறுத்தும் நிலைக்கு
கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
அந்த "பத்திரம்"
"மக்களின் ரிஜிஸ்தர் ஆஃபீசில்"
பதிவு செய்யப்படுமா?
இல்லை
"பத்திரமாக" அவர்கள்
கையில் மட்டும் தான் இருக்குமா?
என்ற கேள்விதான்
நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக‌
இருக்கிறது.
அதற்கு போணி பண்ணவே
இந்த "வாய்ஸ்"கள் ஒலிபரப்பப்படும்
கூத்துகள்
நடந்து கொண்டிருக்கின்றன.

===========================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக