சனி, 6 ஏப்ரல், 2019

சங்கிக்கும் சொங்கிக்கும் நடுவே ஒரு.....கமல்

சங்கிக்கும் சொங்கிக்கும் நடுவே ஒரு.....கமல்
=========================================================ருத்ரா


இஞ்சி தின்று
தேள் கொட்டி
கள்ளும் குடித்து
நிலைகொள்ளாமல்
தவிக்குமே
அதன் நிலை தான்
இன்று கமல் அவர்களின் நிலை.

மதவெறிக்கும்பலை
அவர் சங்கி என்கிறார்.
அதை எதிர்ப்பவர்களை
சொங்கி என்கிறார்.

ட்விட்டரில் அவர் கூறியது
இன்று (07.04.2019) மதுரை "தினமலரில்"
வெளியாகி உள்ளது.

சங்கி எதிர்ப்பாளர்களை
சொங்கி என்று சொல்லி
சங்கிக்கு மகுடம் சூட்டுகிறார்.

எம் ஜி ஆர் சவுக்கு தூக்கினார் என்று
இவரும் சவுக்கு சுழற்றுகிறார்
மாரியம்மன் கோயில் சாமியாடி
தன் மீதே சவுக்கு அடித்துக்கொள்ளுவது போல்.

என்னுள் ஓடுவது காங்கிரஸ் ரத்தம்
என்று
நூல் (பூணூல்) விட்டார்.
அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்
கமல் அப்படி நூல் மாட்டிக்கொள்ளும்
டைப் இல்லை என்பீர்கள்

கருப்புச்சட்டை போட்டார்.
திராவிடம் பேசினார்.
தமிழ் உயிர் என்றார்.
இப்போது கேட்டால்
அதுக்கும் எதுகை மோனையாய்
ஏதாவது சொல்வார்.

இப்போது
சங்கிகளுக்கு எதிரானவர்களை
களவாணிகள் என்கிறார்.
அப்படியென்றால்
இப்படி முதல் களவாணித்தனம் செய்த‌
மூதறிஞர் ராஜாஜி அவர்களை
என்ன சொல்வார்?
எதுவும் சொல்வார்.
விஸ்வரூபத்தில் கறி சாப்பிட்டு
புரட்சி படைத்தாரே.
இது கைபர் கணவாய் வழி தந்திரங்கள்.

இந்த சொங்கிகள்
கையில் இருப்பது
மதவெறி மல்லப்பாக்களுக்கு
மரண அடி கொடுக்கும்
"மக்களின் திராவிட இயக்கம்" எனும்
சுத்தியல்கள்.

கமல்
சினிமா ஜிகினாக்கனவுகளின்
நூலாம்படையிலிருந்து
மீண்டு வருவது
சாத்தியமே இல்லை.

திமுகவை கழட்டிக்கொண்டு வாருங்கள்
காங்கிரஸ் காரர்களே என்றார்.
பிறகு
கிராம பஞ்சாயத்துக்கூட்ட‌ தத்துவத்திற்கு
அவருக்குத்தான்
பட்டயம் இருக்கிறது என்று
கட்டப்பஞ்சாயத்து கணக்காய்
பாடாய் படுத்தினார்.

சங்கிகள் "தாமரை தாமரை" என்கிறார்கள்.
அந்த தூயதமிழ் அவர்கள் வாய்ப்பட்டு
ஆபாசம் ஆகிப்போனது.
அவர்களது தேவபாடையில்
அதை "புண்டரீகம்"என்று அல்லவா
அழைக்க வேண்டும்.
இருப்பினும் செம்மொழித்தமிழில்
அவர்கள் சொல்வது
நம் தமிழுக்கே பெருமை தான்.

இவர் இன்னும் கிராமசபைக்கூட்டத்தை
தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு
தனக்கே சொந்தமானது என்று
அழிச்சாட்டியம் பண்ணுகிறார்.


இவர் தான் சங்கி சொங்கி
என்று சொல்லி நடுவில்
"ஆப்பை அசைத்து அசைத்து எடுத்து
மரப்பலகை இடுக்கில் மாட்டிக்கொண்ட‌
அது மாதிரி"
ஆகிவிட்டார்.
அவரையே கேட்டால் இதை
இப்படித்தான் சொல்லியிருப்பார்.
"சங்கிக்கும் சொங்கிக்கும் நடுவே ...ஒரு மங்கி!

=============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக