சனி, 6 ஜனவரி, 2018

ஆன்மீக அரசியல்


ஆன்மீக அரசியல்
==================================ருத்ரா

ஆயிரம் ஆண்டுப்பொய்கள்
கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
ஆழ்வார்களின்
நாயன்மார்களின்
தமிழ்ச்சொற்களில்
பக்தி சொட்ட சொட்ட‌
வடிந்தது எல்லாம் சரி தான்.
ஆனால்
சைவம்
வைஷ்ணவத்தின்
கழுத்தை வெட்டியது
வைஷ்ணவம்
சைவத்தை
கற்றுணைப்பூட்டி
ஒரு கடலில் பாய்ச்சியது.
இரண்டும் சேர்ந்து
புத்தத்தை
சமணத்தை
கழுவில் ஏற்றியது.
இது அரசியல்.
ஆன்மீகப்பூச்சுகள் எல்லாம்
மறைந்து போயின.
செங்கோலை
அரசர்கள் விறைப்பாக‌
வைத்துக்கொள்ள‌
அவர்கள்
மதவெறியையே
வெட்டரிவாள் ஆக்கி
மனிதம் எனும்
சமூக நீதியின்
கழுத்தை அறுத்தார்கள்.
அரசியல்கள்
மதங்கள் பேசலாம்.
மதங்கள்
அரசியல் பேசும்போது
மனித ரத்தமே
"இந்து மகா சமுத்திரம்"
ஆகி விடும்.
பாபாக்களின்
முகமூடிகள் போட்டுக்கொண்டு
வாக்குகளைக்குவிக்கும்
தாந்திரிக யோக முத்திரைகள்
கண்டு மயங்கி
அப்பாவிகளான‌
தமிழ் நாட்டு ஆட்டுக்குட்டிகள்
ஏமாந்து விடலாமா?
"பா..பா பிளாக் ஷீப்
ஹேவ் யு எனி உல்
எஸ் சார் எஸ் சார்
த்ரீ பேக்ஸ் ஃ புல் "
ஆமாம் உங்கள்
தமிழ்க்கருவூலங்கள்
ஏற்கனவே கொள்ளை போனது
உங்களுக்கு தெரியுமா?
மீண்டும்
உங்கள் ஓட்டுக்களை
அள்ளுவதற்கு
சிங்கம்
தனியாக வந்தாலும்
கூட்டணி சேர்த்து வந்தாலும்
பார்த்துக்கொள்ளுங்கள்.
தமிழ்நாடு
எலும்புக்குவியல்கள்
ஆகிவிடக்கூடாது.
தமிழ்ப்புயல்களே
சீறி வருக!
உங்கள் ஐந்திணை வெளிச்சத்தின்
அருமை வாழ்க்கையியல்கள்
கொத்து கொத்தாய்
சிதறடிக்கப்படும் முன்
உங்கள் வாக்கு தேசங்களை
காப்பாற்ற வருக!
தமிழ் வாழ்க!
தமிழ் வாழ்க!
விண் முட்ட‌
மண் அதிர‌
குரல் எழுப்பு!
தமிழ் வாழ்க!
தமிழே வெல்க!
==========================================

3 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

எல்லா தமிழனுக்கும் தமிழ் உணர்வு இருந்தால் ? ரஜினிகாந்த் அரியணை ஏற ஆசைப்படுவானா ?

karu சொன்னது…

Unarvu kaannaathu.

syed abthayar சொன்னது…

இப்ப தமிழன் விழித்துக் கொள்ளவிட்டால் இனி எப்பவும் தலை நிமிர்ந்து நடக்க முடியாது.. பிழைக்க வந்தவனெல்லாம் தமிழனை ஆள நினைப்பது தான் கொடுமை...

கருத்துரையிடுக