சனி, 27 ஜனவரி, 2018

அடையாளம்

அடையாளம்
======================================ருத்ரா இ.பரமசிவன்

பேனாவும் பேப்பரும் உராய்ந்து கொள்ள‌
அரிப்பெடுத்தால் முதுகு சொறிந்து கொள்ள‌
உதவிக்கு வருவது
மனிதனின் கற்பனை..சிந்தனை.
கவிதை என்று அது கொச்சையாக்கப்படுகிறது.
அங்கே தீப்பொறி பறக்க‌
மனிதனின் மன இடுக்குகளின்
சிக்கி முக்கிக்கல்
கடைந்து கொடுக்கிறது.
மெல்லிய அனிச்சம் மலர்கள் போன்ற‌
காதல் உணர்ச்சிகளும் கூட‌
இந்த பற்சக்கரங்களில் தான்
கடகடத்துக்கொள்கின்றன.
மனிதன் பிறப்புக்கு முன் உள்ள‌
இருப்பு பற்றி
எழுதினால் படிக்க ஆளில்லை.
மனித மனக் குறுகுறுப்புகள் மட்டுமே
மசாலாப்பால் தருகிறது.
ஆண் பெண் பற்றிய தீப்பற்றியெரிதல்கள்
மத்தாப்பு கொளுத்தினால் போதும்.
ஆணும் பெண்ணும் அலையடிக்கும்.

வாழ்க்கைப்போருக்கு ஒரு சித்தாந்தமா?
இல்லை
வாழ்க்கையே தான் சிந்தாந்தமா?
முரண்பாட்டுச்  சித்திரங்கள்...
அந்த சமுதாய "சைக்காலஜி" நமைச்சல்கள்
என்றெல்லாம்
எழுத்துக்களின்
அழுக்கு மூட்டைகள் யாருக்கு வேண்டும்?
மானுட மலர்ச்சியின்
அடையாளங்கள்
ஒரு விடிவு காட்டவேண்டும் என்று
யாருக்கும் இங்கே
தினவுகள் இல்லை.
வினவுகள் இல்லை.


"சேட்"பண்ணினோமா
கன்னம் சிவந்தோமா
நகங்கள் கடித்தோமா
ஸ்மார்ட் ஃபோன் சாக்கலேட்டை
சப்பி சப்பி சுவைத்தோமா
இதுவே எழுத்து!
இதுவே படைப்பு!


==================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக