வெள்ளி, 19 ஜனவரி, 2018

கடவுளை நோக்கி....

கடவுளை நோக்கி....
===============================================ருத்ரா

கடவுளை அறிவதில் என்ன தெளிவு பெற்றீர்கள்?
கடவுள் மனிதன் இரண்டும் ஒன்று என்று
சங்கராச்சாரியார்கள் சொன்னபின்னும்
நான்கு வர்ணக்கொடியே
இன்னும் இந்த நாட்டை
ஆண்டு கொண்டிருக்கிறது.
சனி கிரகம் நோக்கி பயணம் செய்யும்
விஞ்ஞானி தான் உண்மை ஞானம்
எனும்இறுதி முனையை நோக்கி ஓடுகிறான்.
கடவுளை கும்பிட்டு பக்திகாட்டும் நீங்களோ
திருநள்ளாறு நோக்கி
பாய்ந்து பிறாண்டிக்கொண்டு ஓடுகிறீர்கள்
சனிப்பெயர்ச்சி தோஷம் போக்க..
அதாவது உங்கள் சுயநலம் காப்பதாய்
ஒரு மூட நினைப்பில் ஓடிக்கொண்டிருகிறீர்கள்.

*  *   *   *   *   *  *   *  *

இது வெறும் பெயர் சூட்டும் போர் தான்.
அஞ்ஞானத்தை ஞானம் என்பதும்
ஞானத்தை அஞ்ஞானம் என்பதும் தான் அது.
கட உள் அல்லது வெளியே
என்று கடந்து போய்க்கொண்டே
இருப்பது தான் ஞானத்தின் நோக்கம்.
கடவுள் என்பதோடு தேங்கிவிடுவதல்ல அது.
இல்லை இன்னும் தேடிப்போக வேண்டும்
என்பது நாத்திகம்.
போதும் இது.
வாருங்கள்மந்திரம் ஓதி
குடமுழுக்கு செய்யலாம் என்பது ஆத்திகம்.


*   *    *   *   *   *    *    *   *    *



2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

ரசித்தேன் கருத்தை நன்று.

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

நன்றி திரு கில்லர்ஜி அவர்களே

கருத்துரையிடுக