திங்கள், 15 ஜனவரி, 2018

ஜெயமோகன் எனும் ஒரு பாசாங்கு

ஜெயமோகன் எனும் ஒரு பாசாங்கு

======================================ருத்ரா





கவிதைக்குரிய ஓர் அழகியல்மரபு, ஒரு தரிசனநிலை இது. இதை உலகியலுக்கு அப்பால் செல்ல முடியாத மேலைநாட்டு ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளாமலிருக்கலாம். அவர்களிடம் அதைச் சொல்வதே நம் கவிமரபின் மனநிலையாக இருக்கவேண்டும். அவர்கள் சொன்னவற்றிலிருந்து மேலும் கீழே சென்று பார்ப்பது அல்ல. டி.செல்வராஜும் வைரமுத்துவும் கொண்டுள்ள மனநிலை என்பது அடிப்படையில் இந்த அன்றாடக் கீழ்மைநோக்கு கொண்டுள்ளது. அது ஆண்டாளின் கவிதைகளுக்கு மட்டுமல்ல அத்தகைய மனநிலையில் எழுதப்படும் அத்தனை கவிதைகளுக்கும் இழுக்கு சேர்ப்பதுதான்


http://www.jeyamohan.in/105607#.Wl1edKiWbX3


----------------------------------------------------------------------------------------------------






எங்கள் அன்பான எழுத்தாளர்

ஜெயமோகன் அவர்களே !

நீங்கள்

எங்கள் தமிழ் எழுத்துக்களை

காக்காய் இறகுகளைப்போல் தான்

மகுடம் சூட்டிக்கொண்டு

அலைகிறீர்கள்

என்பதை மேலே உள்ள

உங்கள் வரிகள் அப்பட்டமாக

காட்டுகின்றன.

மிகவும் புளித்துப்போன

புராணங்களை

இதற்குமேலும்

அவை நோய்க்கிருமிகளின்

கிட்டங்கி தான்

என்று தெரிந்தும்

அதை "மேல் நோக்கு "

என்று முலாம் பூசி

அடைகாக்கும் நீங்கள்

கவிஞர் திரு வைரமுத்து

அவர்களைபற்றி

அந்த வரிகளை ஓட விட்டிருப்பது

சீக்குப்பிடித்த உங்கள்

குறுகிய இதயத்தின்

இ.சி.ஜி வரிகள் என்பதில்

எள்ளவும் சந்தேகமில்லை.

சூதர்கள்

பழங்காலத்தில்

எத்தனையோ

கிசு கிசுக்களை

கொசுக்களாக பரவ விட்டதே

நம்மை இன்னும்

மகாபாரதமாக கடித்து

டெங்கு பரவவிட்டிருக்கும்

இந்த வேளையில்

ஒவ்வொரு கொசுவையும்

லட்சக்கணக்கான சைஸுக்கு

உருப்பெருக்கி

இந்த இந்திய மண்ணை

நோய்களின் பண்ணைக்காடாக

மாற்றிக்கொண்டிருக்கும்

நீங்கள்

மனிதம் ..சமுதாயம் ..இலக்கியம்

என்றெல்லாம்

வேடங்கள் போடுவதை

நிறுத்திவிட்டு

ஒரு கதாயுதத்தைத்தூக்கிக்கொண்டு

ஏதாவது "ஒரு சேனாவின்"

பின்னால் ஓடுவதைத் தவிர

வேறு வழியில்லை.

கீழ் நோக்கி

எங்கோ ஒரு அதல பாதாளத்தில்

சாதி மத வெறிப்புகை

கக்கிக்கொண்டு விழும் நீங்கள்

"ஒரு முட்டாள்களின் சொர்க்கத்தில் "தான்

இருக்கிறீர்கள்.

கூழாங்கல் குத்துப்பாறை கூட

உங்களுக்கு "எவரெஸ்ட்" தான்.

மனிதம் எனும்

சமூக நீதியின் வெளிச்சம்

எங்கே கண்களில் பாய்ந்து விடுமோ

என்று

எழுத்துக்களின்

ஆயிரம் ஆயிரம் பாசாங்குகளில்

பாம்புப்படுக்கை விரித்துக்கொண்டு

அவதாரங்கள்

காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.




"மயிற்பீலிகள்"என்று

மலையாள தேசத்தில்

ஓ.என்.வி .குரூப் என்ற

பெருங்கவிஞன் இருக்கிறானே

அவன் சுவாசம் பட்டுமா

உங்கள் பேனா

இப்படி யொரு  உலக்கையாக

ஒரு தலைகீழ் பரிணாமத்துள்

வீழ்ந்து கிடக்கிறது.

வெட்க்க்க்கம்..!


=======================================





2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

சரியான சாடல் ....

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

ஜெயமோகன் எனும் சிறந்த தமிழ் எழுத்தாளர் என்பவர் நமக்கு மிகவும் பெருமிதம் தருபவர் தான்.ஆனால் அந்த "தமிழ்" என்பது மட்டும் அவர்க்கு அலர்ஜியாகி அவர்க்கு ஏன் அது ஒரு நோய் ஆனது
என்பது மட்டுமே புரியாத புதிர்.

கருத்துரையிடுக