ஞாயிறு, 7 ஜனவரி, 2018

நகைச்சுவை (2)


நகைச்சுவை (2)
================================================ருத்ரா

வான் உலகம்.
மேக மண்டலங்களினூடே ...
"நாரதாயண ..நாரதாயண"
விஷ்ணு  நாரதரை
அழைத்துக்கொண்டே வருகிறார்.
"க்ஷமிக்கணும் ..க்ஷமிக்கணும்
அபசாரம் அபசாரம்..
"நாராயண நாராயண..என்று
நான் அல்லவா
உங்களை அழைக்கவேண்டும்.
நீங்கள் என்னை இப்படி
அழைத்துக்கொண்டு வரலாமா?"

"போகட்டும் ..விடு நாரதா?
எனக்கு ஒரு அவசரமான கேள்வி
உன்னிடம்."

"பாற்கடலில் பள்ளிகொண்ட
பரந்தாமா? இது என்ன சோதனை?
நாயேன் என்னிடம்
தங்களா கேள்வி கேட்பது?"

"விடு நாரதா.
எனக்கு இந்த வைகுண்டம்
அலுத்துவிட்டது.
நரர்கள் சொர்க்கவாசல் என்று
நம்மைத்தேடி வருகிறார்கள்.
இதைவிட சுவாரஸ்யமான
சொர்க்கவாசல் வேறு எங்கும்
இருக்கிறதா சொல்"

"பரந்தாமா
அதைச்சொல்லத்தான்
உங்களிடம் ஓடோடி
வந்து கொண்டிருக்கிறேன்...
அதோ கீழே பாருங்கள் ..."

மேகமண்டலங்களைத்துளைத்துக்கொண்டு
இருவரும் பார்வையிடுகிறார்கள் .

காட்சி  விரிகிறது
......................................

..................................

"அய்யா சாமி  கொஞ்சம் தர்மம் செய்யுங்க சாமி"

(எதிரே வருகிறவர் தன பாக்கெட்டிலிருந்து துழாவி
ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை அவர்  தட்டில் இடுகிறார்.)

"கோயிச்சுக்காதீங்க சாமி...இந்தாங்க இந்த சில்லறையை
திருப்பி வாங்கிக்கிங்க சாமி.."

"ஏம்பா ..உனக்கு எவ்வளவு வேணும்?"

"மன்னிச்சுங்க சாமி.... நான் பத்தாயிரம் இருபதாயிரம்
ரூபாக்கட்டுகளுக்கு  கொறஞ்சு வாங்கிக்கிறது இல்லை சாமி."

அப்போது தான் இவர் அவர் தட்டை பார்க்கிறார். அதில் அவ்வளவும்
இரண்டாயிரம் ரூபாய் கற்றைகள்..."

 ...............................................
.................................................

"நாராயணா ..நாராயணா .."
சொல்லிக்கொண்டே
நாரதர் திரும்பிப்பார்க்கிறார்.
அங்கே
நாராயணர் கீழே மயங்கிக்கிடக்கிறார்,

அவர்கள் பார்த்த இடம்  வடசென்னை  ஆர்.கே  நகர்.

======================================================
பொறுப்பு துறப்பு :-

இந்த காமெடி புராணம்
நகைச்சுவைக்காக ..நகைச்சுவைக்காக
மட்டுமே!

=======================================================





1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…

ஆர்.கே.நகருக்கு வரவதற்கு எல்லோரும் ஆசைப்படுகின்றார்களே,,,,,,

கருத்துரையிடுக