வெள்ளி, 26 ஜனவரி, 2018

நாளை நமதே



நாளை நமதே
=============================================ருத்ரா

உலகநாயகன் அவர்களே!
உங்களை ஏன் இவர்கள்
கலக நாயகனாக பார்க்கிறார்கள்?
புதிய அரசியல் உதயம்
ஒன்றை விதைதூவ‌
அந்த மானுடவெளிச்சத்தின்
மாமேதை "கலாம்" அவர்களின்
பிறந்த மண்துளியிலிருந்து
நீங்கள் புறப்படுவதில்
என்ன "கொச்சைப்படுத்தல்" இருக்கிறது?
இது
அவர்கள் அடிவயிற்றுக்கிலியா?

இந்தியாவின் குடியரசு தினவிழா
நம் உள்ளங்களில்
இன்னும் மகிழ்ச்சியை நம்பிக்கையை
பெருக விட்டுக்கொண்டு தான் இருக்கிறது.
ஆம்
அது நம் அவலங்களையும் கவலைகளையும்
துன்ப துயரங்களின்கொடும் காட்சிகளையும்
நம் கொடியாக்கி துணியாக்கி
வர்ணங்கள் காட்டி காட்டி
அசைத்துக்கொண்டு தான் இருக்கிறது.
நம் அரசியல் கனவு
ஈடேறவில்லையே.
அது தான்
கமல் அவர்களே
உங்கள் காலடிகள் தோறும்
அச்சிட்டு அச்சிட்டு
இந்த மண்ணின்
காகிதத்தில் பதிக்க இருக்கின்றன.

நம் தேசிய கீதம்
எவ்வளவு நீண்ட கனவை
மாணிக்க வரிகளாக்கி
நம் முன் மடித்து மடித்து
விரித்துக்காட்டுகிறது!

"...........
பஞ்சாப் சிந்து குஜராத்து மராட்டா
"திராவிட" உத்கல பங்கா"
..............
................"

இந்தியாவை உலகில்
நாங்கள் தான் தூக்கி உயர்த்துகிறோம்
என்று
விமானங்கள் தோறும் ஏறி
வீர முழக்கம் செய்பவர்களே!

நன்கு கவனியுங்கள்!
உங்கள் அடியொற்றுபவர்கள்
எங்கள் தமிழ் நாட்டில்
வைக்கின்ற முழக்கம்
"திராவிடத்தை" அழிப்போம் என்பது.

உலக நாயகன் அவர்களே
"திராவிடத்தை"க்காப்போம்
என்ற சொல் உங்கள் உரையிலிருந்து
உதிர்ந்து விழக்கேட்டோம்.

தேசிய கீதத்தையே
அவமானம் செய்வது போல்
திராவிடத்தை
அழிக்கப்புறப்பட்டிருக்கும்
அந்த வெறித்தீயை
அழித்து ஒடுக்க‌
உங்கள் காலடிகள்
புயல்போல் புறப்படட்டும்.
உங்கள் பகுத்தறிவுச்சுடர்
இந்த சாதி மத குறுக்கீடுகளை
துடைத்து
ஒரு வெளிச்சம் பூக்க‌
புறப்படட்டும்!
வாழ்க உங்கள் இயக்கம்!
வெல்க உங்கள் பயணம்!

நாளை நமதே

இதோ
ஒரு திரைப்படம்
புதிய அரசியல் அலைகளின்
"திரை"ப்படமாக‌
நம் தமிழ்த்தரையெல்லாம்
சிலிர்க்க சிலிர்க்க
நடைபயின்று வருகிறது.
அந்த பாடல் கூட‌
ஒரு குடும்பம் இணைவதற்கான‌
ஒரு இன்னிசை முழக்கம் தானே!
நம் ஜனநாயகம்
கை வேறு கால் வேறாய்
இதயம் சுக்கல் சுக்கலாய்
ஊழல் கொடுநோயில்
சிதைவுற்றுக் கிடக்கிறதே!
தமிழ் எனும்
த‌ன்
உயிர்விசையைக்கூட‌
சில்லறை சில்லறையாக மாற்றி
சிதிலமடந்துதன் கல்லறையை இந்த‌
வாக்குப்பெட்டிக்குள்
இட்டுக்கண்டு இறுமாந்து கிடக்கும்
இந்த ஈசல்களிடையே இருந்து
ஒரு மின்னல் "பளீ ர் " இடட்டும்.

நாளை நமதே
விழித்துக்கொண்ட தமிழனுக்கு
"நாளை மட்டும் அல்ல"
நாளும் நமதே

===========================================












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக