புதன், 17 ஜனவரி, 2018

கமலின் சாசனம் (6)

கமலின் சாசனம் (6)
===========================================ருத்ரா

கல்வெட்டு சாசனம் என்று
நினைக்க வைத்தார்.
ஆனால் தெரிவதெல்லாம்
கானல் நீர் காட்சிகள் தான்.

நீரில் எழுத்துக்கள் கூட‌
சில வினாடிகள்
திவலைகளின் சிதறலாய்
தெறித்திடுமே!
இப்போது
பிப்.21 என்கின்றார்.
அதுவும் 2018 ஆ 2019 ஆ
என்று
மறுப‌டியும் ட்விட்டுவார்.
ராமநாத புரத்திலிருந்து
அவர் உலாவரும் கோலத்தின்
முதற்புள்ளி தொடங்குமாம்!

இவரும் சரி
அவரும் சரி
அந்த மலேசிய விழா எனும்
வண்ண வண்ணங்களின்
சதுப்புக்காட்டிலிருந்து
மீண்டு வரவேண்டும்.

தமிழ் நாடு அரசியல் எனும்
கொட்டாங்கச்சியில் தான்
இவர்கள் நீச்சல் குளங்களா?

உச்ச நீதி மன்ற‌
நீதிப்பேரரசர்களிடையே
உலைக்களம் ஒன்று
கொதிக்கின்றது.
அந்த கொல்லுலைக்கூடத்தில்
வெறும் அடிசரக்காய்
சிலர் விரும்பியது போல்
நம் ஜனநாயகம்
ஒரு "மத"நாயகமாய்
வார்க்கப்பட்டுவிடுமோ
என்றொரு அபாயம்
நம் கண்ணின் முன்னே
நிழல் ஆடுகின்றது.

கமலின் கருத்து எனும்
புயல்
இங்கே எங்கே மையம் கொள்ளும்
தெரியவில்லை
புரியவில்லை.

ரஜனிக்கு
குருமூர்த்தி எப்போது
ஒரு அலங்கார‌
முகமூடி ஆனார்?
மோடிஜியின்
எண்ணக்குமிழி தான்
இவர் ஆன்மீகமா?
குழம்புகின்றார்.
நம்மையும் குழப்புகின்றார்.

"இந்தியா டு டே"யின்
காகிதக்கிரீடம்
ஸ்டாலின் தலையில்!
அப்படியென்றால்
இந்த "கட் அவுட்"டுகளின்
நிழல்
எது வரை நீளும்?

கணினிப்பொறிகளின்
பட்டன் தட்டுமா
இவர்கள் கனவு?

இஸ்ரேல் பிரதமர்
நமது பிரதமரை
புரட்சி தலைவரே
என்கிறார்.

இங்கே
ஜெயகுமார்களும்
தம்பித்துரைகளும்
வட்டமடித்து கும்மியடிக்கும்
"எம்.ஜி.ஆர்" படத்தின்
எம்ஜியார்
நமக்கெதற்கு வம்பு என்று
தன் தொப்பியை
கழற்றி வைத்திடுவாரோ?

யார் கண்டது?
அரசியல்ல எல்லாம் சகஜமப்பா!
நம்ம கோடம்பாக்கத்து ப்ளாட்டோ
கவுண்டமணி அடித்த‌
கமெண்டே
நம்ம அரசியல் சட்டத்துக்குள்ளிருந்து
சட்டம் பிதுங்கி
வெளியே படம் காட்டுது.

கீரி எங்கோ?
பாம்பு எங்கோ?
இங்கே கூடை மட்டும் காலி.
சுற்றியிருக்கும்
கூட்டத்திற்கோ ஜாலி!

======================================================

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

ஸூப்பர் இரசிக்க வைத்தன...

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

இவர்கள் இருவரும் மகுடி ஊதுவது ஏதோ ஒரு அட்டைப்பாம்பு நோக்கியா?

கருத்துரையிடுக