செவ்வாய், 23 ஜனவரி, 2018

அந்த இருவர் (ரஜனி கமல்)

அந்த இருவர் (ரஜனி கமல்)
================================================ருத்ரா

அந்த இருவரையும்
மொய்த்து
கூட்டம் கூடிவிட்டது.
ரசிகர்கள் தலையில்
கிரீடங்கள்.

இன்னும்
மெனு எழுதிபோடவில்லை.
ஆனால்
பந்தி களைகட்டி விட்டது.
நாங்கள் ஒருவரும்
இங்கே
சாப்பிட வர வில்லை என்று
அவர்களில் சிலர்
வீரமுடன் முழங்கியதைப்பார்த்து
நம் வயிறு நிறைந்து விட்டது.
ஒரு ரஜனி நின்னாபோதும்
நூறு ரஜனி நிப்பாங்க!
(திருத்திக்கொள்ள வேண்டும்
நூறு இனி லட்சம்!)

இங்கே இவர்  என்னமோ
ஆழ்வார்பேட்டை வீட்டுத்திண்ணையில்
ஈசிச்சேரில் சாய்ந்து கொண்டு
பேசுவது மாதிரி
தன் ஆயுளுக்குள் இந்தியாவை
பெருமைப்படுத்திவிட்டே தான் போவேன்
என்று வெத்திலை குதப்புவது போல்
பேசுகின்றார்.
டிஜிட்டலில் இன்னும்
5ஜி யிலிருந்து 50 ஜி வரைக்கும்
தாவட்டும்.
ஆனால் அந்த வட இந்திய "ஜி"க்கள்
நமக்கு வைக்கும்
"ஹர்டில்" ரேஸில் நம்மை
மீட்டு தர
என்ன "மேனி ஃ பெஸ்டோக்கள்"
வைத்திருக்கிறார்
என்று  தெரியவில்லையே!
அவர்கள்
"ராமர் வில் முறித்ததை"த்தான்
அரங்கேற்றுகிறோம்
என்று சொல்லி
நம் "சுயாட்சியின் மு துகெலும்பை" அல்லவா
முறிக்கக்கிளம்பியிருக்கிறார்கள்.

இவர்களது
ஆத்மீகமும்
பகுத்தறிவும்
மாரீசன் சுபாஹு
பொய்மான்கள் போல்
நிழற்படங்கள் காட்டிவிடுமோ
என்றொரு அடி மனதின்  அச்சம்
நம்மை கவ்விக்கொண்டிருக்கிறது!

இந்திய ஜனநாயகம் எங்கோ
படுகுழியில்
விழுந்து கொண்டிருக்கிறது
என்று
கவலை நிறைந்த
சொற்கள் நிறைத்துத் அந்த‌
அந்த "நீதிப்பேரரசர்களின்"
மில்லியன் டாலர் கேள்விகளில்
எந்த "வேள்வியும்"
இங்கு நடப்பதற்கான‌
அறிகுறிகள் இல்லை!

ஒரு "மாமூல்" தனத்தை
"மாமூல்" அற்ற தனமாக மாற்றும்
மகத்தான வேள்விக்கு
இவர்கள்
எங்கிருங்து
"சுள்ளிகள் பொறுக்கி"
சுருதி கூட்டி
அக்கினி மூட்டப்போகிறார்கள்?
மொய்த்துக்கொண்டிருப்பது
சுறு சுறுப்பானா தேனீக்கள் தான்.
அவை
தேனீக்களா?
தேவ ஈக்களா?
இல்லை
வெறும் ஈக்களா?
மிகவும் அருகில் வந்து விட்டார்கள்.
கணப்பு சூடேறி விட்டது.
நிச்சயம்
ஒரு தூய விடியல் படைப்பார்கள்
என‌
நம்புவோமாக!
பெரு மகிழ்ச்சியுடன்
வாழ்த்துவோமாக!

================================================================










1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…

பார்ப்போம் நடக்கப் போவதை...

கருத்துரையிடுக