திங்கள், 29 ஜனவரி, 2018

தியானம்

Meditation.
======================================

They say it is

meditation
 but in a sense
it is a boiling point
where all our mind and body
evaporate
into a vacuum
where you can not
mind your
mindlessness..
You transcend all your foolery
to a new horizon of newer foolery.
Simply you can
label it psychology..
a science of mind.
You dive in the ocean of
rationalism..
but why you again
carry all these sea weeds of
irrational godly things
and other mental rubbish
and obsessions of void.

=================================  ruthraa  sivan






(இதை தமிழில் கீழே தந்திருக்கிறேன் )





தியானம்
============================================ருத்ரா

இது தான் தியானம் என்று
தியானத்தில் இருந்தவர்கள் 
சொல்கிறார்கள்.
ஒரு வகையில் 
இது ஒரு கொதிநிலை.
உள்ளமும் உடலும் வெந்து
ஆவியாய் மறைகிறது.
ஒரு மூளியான வெளிக்குள்
அது விழுகிறது.
அங்கே உள்ளம் அற்ற நிலை.
அதை உன்னால் 
உள்ளுவதும் இயலாது.
நீ திடீரென்று இப்படி
உருமாறுவதாய் அல்லது
உரு இழப்பதாய் உணர்கிறாய்.
உன் அறியாமையின் வர்ணசித்திரங்கள்
எல்லாம் அங்கே
காணாமல் போகின்றன.
அப்புறமும் அதைவிடவும் 
முட்டாள் தனமான விவாதங்களை எல்லாம்
சுமந்து கொண்டு வருகிறாய்.
தியானிப்பது என்பது
வெறும் "உளவியல் விஞ்ஞானம்"
எனும் முத்திரையை மட்டும்
வைத்திருந்தால் போதுமே.
எதற்கு இந்த‌
பொம்மை விளையாட்டு போன்ற‌
"விரல்" முத்திரைகள்.
"சூ மந்திரக்காளி"க்கூச்சல்களால்
உன் விடியல் தோன்றாது.
உன் மனதை அறிவோடு தீட்டி
இரண்டையும் கூர்மையாக்கவே
அந்த பகுத்தறிவுக்கடலுக்குள்
முக்குளி போடுகிறாய்.
மீண்டும் 
ஏன் அங்கிருந்து
"பாசிபிடித்த" கடற்பாசிகள் எனும்
குப்பை புராணங்களை
அள்ளிக்கொண்டு வருகிறாய்?
உன் மனம் வெறுமையானதில்
ஏற்பட்ட கிடு கிடு பள்ளத்தில்
விழுந்து கிடக்கிறாய்.
மனம் முறிந்து பட்ட‌
கருத்துகளையும்
அதன் கோணல் மாணல் உருவங்களையும்
கோவில்கள் என்ற பெயரில்
கொண்டு வந்த அடைக்காதே.
இந்த அடைசல்கள் 
அகற்றப்பட வேண்டியது பற்றியே
சிந்தனை செய்.
ஆம்.
தியானம் அல்ல‌
சிந்தனை செய்.

=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக