ஞாயிறு, 28 அக்டோபர், 2018

மக்கள் பீதி மய்யம்.

மக்கள் பீதி மய்யம்.
==============================================ருத்ரா

எங்கள் அன்பான‌
உலக நாயகர் அவர்களே.
உங்கள் ட்விட்டர்கள் கண்டு
முதலில்
சிந்தித்தோம்.
அடுத்து
ரசித்தோம்
அப்புறம்
குழம்பினோம்
இப்போது
அதிர்ச்சியும் பீதியும் தான்
எங்களை
கலங்க வைக்கிறது.

தமிழ் எங்கள் உயிர் என்றீர்கள்.
அப்புறம் அது
பின்னுக்கு போனது.
திராவிடம் என்றீர்கள்
அப்புறம்
ஊழலை எதிர்ப்போம்
என்ற கொடியை உயர்த்தி
திராவிடக்கட்சிகளை
அழிப்போம் என்றீர்கள்.
என் ஜீனுக்குள்
காங்கிரஸ் துடிக்கிறது என்றீர்கள்.
அதனால் காங்கிரஸ் கூட்டணி
பரவாயில்லை என்றீர்கள்.
முந்த்ரா ஊழல் மூலம்
ஊழலை துவக்கியதே காங்கிரஸ் தான்
என்பதும் கூட மிக வசதியாய்
உங்கள் ஞாபக மறதியின் குழியில் போய்
விழுந்திருக்கலாம்.
தற்போதைய அவலங்களை எதிர்க்கும்
ஜனநாயக அலைகளின்
முன்னோடி அலைகளாய்
மக்களின் கவனம்
ஈர்த்துக்கொண்டிருக்கும்
திமுக கூட்டணியை உடைக்க‌
சம்மட்டி தூக்கத்துவங்கி விட்டீர்களே.

இலங்கையின் படுகொலைகளை
அரங்கேற்றிய ராஜபக்ஷே
இனி அப்படியெல்லாம் செய்யமாட்டார்
என்ற
பொன் ராதாகிருஷ்ணன் அவர்களின்
பாட்டுக்கு
நீங்களும் சுருதி சேர்த்தீர்களே
அதில் எங்கே
மக்களின் நீதி இருக்கிறது?
ஒரு பீதி அல்லவா படர்ந்து
எங்களை கவிகிறது.
கமல் அவர்களே!
தமிழ் இனம் எனும்
வட்டம் இருந்தால் தானே
அந்த "மய்யத்துக்கு" மதிப்பு.
தமிழின வட்டம் இல்லாமல்
உங்கள் மய்யத்தினால் என்ன பயன்?

===============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக