சனி, 20 அக்டோபர், 2018

கழுவிய நீரிலும் நழுவிய மீனா கமல்?



கழுவிய நீரிலும் நழுவிய மீனா கமல்?
=================================================ருத்ரா

உச்சநீதி மன்றம்
சபரிமலைக்கோவிலுக்கு செல்லும் பிரச்னையில்
எல்லாப்பெண்களுக்கும்
சம உரிமை அளித்த‌தைத்தொடர்ந்து
தற்போது சபரிமலையில் நடைபெறும்
நிகழ்வுகள் பற்றி
கமலிடம்
செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு
நான் அந்த கேள்விகளுக்கு எல்லாம்
பொறுத்தம் இல்லாதவன்
என்னிடம் அதையெல்லாம் கேட்காதீர்கள்
என்பது போல்
நழுவிக்கொண்டு விட்டார் அவர்.
தசாவதரம் எடுத்து அமெரிக்க அதிபர்
புஷ் போல் எல்லாம்
கலக்கியவர்..கலக்கி கலக்கி
தெளியவிட்டவர்.
எதைக்கண்டும் அஞ்சாமல் அறிக்கை விடுபவர்.
விஸ்வரூபம் எடுத்து வெடிப்பவர்
இப்படி
"நமத்துப்போன" ஊசிப்பட்டாசாய்
ஊமை வேடம் போட்டது ஏனோ?
இது வரை ஏற்ற வேடங்களில்
இது தான் அவருக்கு பிடித்த வேடமோ?
அல்லது
இப்போது தான் வேடங்களை எல்லாம்
கலைத்து விட்ட நிலைமையோ?
அரசியல் அரிதாரம் பூசும் முன்
தோழர் பினரயி விஜயன் அவர்களை...
அவர்கள் சித்தாந்தத்தை...
தொட்டு ஆரம்பித்தவர்
அந்த தொடு புள்ளியை மறந்து
அவர் கோலத்தை தொடராமல்
இப்படி ஒரு
அலங்கோல அறிக்கையை அவரிடம்
யாருமே எதிர்பார்க்கவில்லை.
மய்யம் இழந்த டைட்டானிக் கப்பல் போல்
மய்யம் இழந்து போய்விடுமோ
அவரது ம.நீ.மய்யம்?
காவிக்குள் கருப்பா?
கருப்புக்குள் காவியா?
காவிய நாயகர் தான்
நெஞ்சைத்
தொட்டுப்பார்த்துக்கொள்ள வேண்டும்!


=====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக