சனி, 27 அக்டோபர், 2018

விடியல்




விடியல்
=========================================ருத்ரா

ஓடும் குதிரையின் வாய்க்கு முன்
இதோ
வாய்க்குள் அகபட்டுவிடும்
என்ற ஒரு தோற்றத்தை மட்டுமே
காட்டி காட்டி
ஏமாற்றும் நிகழ்வு இது.
ஒரு குச்சியில் கொஞ்சம்   புல்லைக்கட்டி
அதன் வாயில் பட்டுவிடும் போல்
காட்டிக்கொண்டே இருப்பது இது.
அதனால்
ஏமாற்றப்படும் குதிரை
நுரைதள்ளி நுரைதள்ளி
மூச்சைப்பிடித்துக்கொண்டு ஓடும்.
நம்பிக்கை எனும் சொல்
"இன்று ரொக்கம் நாளை கடன்"
என்னும் பலகை போல்
அதன் கண்முன் காட்டப்படுகிறது.
இலங்கைத்தமிழர்களுக்கும் சரி
இங்குள்ள தமிழர்களுக்கும் சரி
இந்த கானல்நீர் மட்டுமே
ஏக்கம்
நோக்கம்
தாகம்
கவிதை
வரலாறு எல்லாம்.
தொன்மையின்
ஒளிநிறைந்த நம் தமிழ்....
உலக நாகரிகத்தின் தொட்டில்
ஆக இருந்த நம் தமிழ்.....
ஏமாற்றம் வஞ்சம் சுரண்டல்
சாதி மதங்களின் சாராயங்கள்

ரத்தம் மரணம் பேராதிக்கம் இவற்றின்
குப்பைத்தொட்டியாய் கிடக்கிறது.
"திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது"
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பாடிய  வைர(ல்)வரிகள் இவை.
ஏமாற்றும் ஏமாற்றப்படும்
இந்த கொடுமைக்கும் காரணம் கூட‌
நம் தமிழர்களே.
அதனால் தமிழ் இங்கு
புதைந்து கொண்டிருக்கிறது.
தமிழனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால்
இந்த அழிவைத் தடுக்க முடியாது.
அது வரை
விடிவது போல் தோற்றம் தரும்
அந்த விடியல் சினிமாவைப்பார்த்து
விசில் அடித்துக்கொண்டு இருப்போமாக!

===============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக