வெள்ளி, 19 அக்டோபர், 2018

வெண்குருகு ஆற்றுப்படை (2)

வெண்குருகு ஆற்றுப்படை (2)

==============================================ருத்ரா இ பரமசிவன்.

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்
நீள்நெடுங்கரையில் நிலம் கீறி நடந்து
சிறுமீன் உறுமீன் இரை கொள்ள ஓர்த்து
அலகு ஆட்டி உறுபசி தீர்க்க‌
புன் கால் பதிய‌ நுழை ப‌டுத்தாங்கு
ஓலை நறுக்கு ஒன்று கால் இடறக்கண்டு
இடுங்க‌ண் குவித்து ஓலையுள் உழுத‌
வ‌ரிக‌ள் சொல்லிய‌ வ‌ர‌லாறு உரைப்பேன்
.கேளிர் ஈண்டு ப‌ண்டு ஊழிப் பெய‌ர்ச்சிக‌ள்
.


"பெரும்ப‌ல்லி வ‌ருமுன் இருந்த‌ பேரூழி
பேழ்ந்த பெருங்க‌ல் பெரும்புல் காட்டிலும்
சுவ‌டு ஒற்றிய தொல்த‌மிழ் ஓதை
ப‌ர‌விப்பாய்ந்து ப‌ல்லூழி க‌ட‌ந்த‌
உயிர்வ‌ழிக் காதை கேள்மின்!கேள்மின்!

ஒற்றை ஏட்டில் ஒளிந்ததை விரித்து
வெண்குருகு விண்டது பலப் பல்லாயிரம்
.
பெரும்பல்லி இனங்கள் எலும்புகள் எச்சமாய்
தொல்லியல் அறிஞர் தொகுத்தது அறிவீர்
.
வகைப்படு பல்லிகள் வகையினை அறிந்தால்
உயிரியலுள்ளே ஒரு இயற்பியல் அறிவீர்
.
தொல்காப்பியம் மூன்றாய் உரித்த‌
எழுத்து சொல் பொருளெனுமாப்போல்
ஊரினம் கிடப்பினம் பறப்பினம் எனவாங்கு
உள்பொதி உண்மை ஓர்மின் நன்கு
.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து
ஊழிப்பிழம்பை உய்த்து நோக்கின்
மூவடுக்கினிலே முகிழ்த்துக்கிடந்த‌
உயிரின் பயிரின் வகையினைக் கேள்மின் !
.
வெண்குருகாய் குரல் மிழற்றும்
யானோர் ஈண்டு அறிவியல் படைப்பு
.
விண்ணின் வெளியில் சூப்பர் நோவா எனும்
பெருஞ்சுட‌ர்ப் புதுமீன் உருக்கொண்டு க‌ருக்கொண்டு
வெடித்துப்பிற‌ந்த‌து,விந்தை விரிந்த‌து.

கோடிமீன்க‌ள் ஒன்றாய்த்திர‌ண்டு ஒருமீன் ஆகி
ஒளிர்ந்த‌பின் இற‌ந்து ஒழிந்திடும் நிக‌ழ்வு அது
.
அது த‌ந்த‌ விண்ணின் திட்டு ஒன்றில்
முத‌ல் உயிர்ப்பொறி வெளிச்ச‌ம் த‌ந்த‌து.

=========================================================
தொடரும்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக