வியாழன், 4 அக்டோபர், 2018

ஒரு நீள் தொகைப் பாடல் ..


 ஒரு   நீள்  தொகைப்  பாடல்  ..

"வெண்குருகு ஆற்றுப்படை"


குருகின் வருகை
=======================================ருத்ரா இ பரமசிவன்

போர்த்த கையுள் புள் இமிழ்த்தன்ன‌
பாசிலை மூடிய பல்மலை அடுக்கத்து
ப‌னிநீர் இழித‌ரும் குழையொலி கேட்டு
அக‌த்திய‌ வாடை உயிருள் ஊர்த்து
அக‌ம் நெளிந்த‌தை ஈங்கெழுதுகின்றேன்
.
பிய்ந்தும் அமிழ்ந்தும் எஞ்சிய‌பின்னே
பிற‌ந்த‌து ஆழியின் ம‌லை
கல்லொடு பொருது புல்லொடு பெயர்த்து
தண்டுளி விழுது இழிதந்தாங்கு
வெண்படல் விரித்து குணில் பாயருவி
ஊர்ந்து ஊர்ந்து காயல் தழுவும்
.
விரிமணல் வரியில் அலவன் எழுதும்
சுவடுகள் சிதைய கால் தெற்றி நடந்தேன்
நுரையில் மாலை திரைகள் தொடுக்க‌
நுவலும் கடற்குரல் பண்ணும் ஒலிக்க‌
இளங்கட்செல்வன் பசுங்கதிர் அளைஇ
பொறிப்பூம் புள்ளினம் கோடுகள் தீற்றும்
வெறிவளர் தீ எழில் கிழக்கினில் மூள‌
நடந்தவன் நின்றேன் திடுக்கிட்டு குனிந்தேன்
கால்விரல் கவ்விய வெண்குருகொன்று
மிளகுக்கண்ணில் குறு குறு விழித்து
அஞ்சிறை கொண்டு அகல மூடி
நீள்க‌ழுத்து உள் புதைத்து நிற்கும்
.
கூஉய்த் த‌ந்த‌ குறுக்கீற்று ஒலியில்
கூதிர் நனைத்த பனிக்குள் விறைக்கும்
.
கைபொத்தி ஏந்தி குருகினை நோக்கி
கூர்விழி வீசி நுண்மொழி யாற்றினேன்

(தொடரும்)

===============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக