திங்கள், 29 அக்டோபர், 2018

கான்யாற்றுப் பிழியல் நீர்படுத்தன்ன‌

கான்யாற்றுப் பிழியல் நீர்படுத்தன்ன‌
=======================================ருத்ரா இ பரமசிவன்

கான்யாற்றுப் பிழியல் நீர்படுத்தன்ன‌
பாசடை அடர்கரை நெகிழ்ப்  பட்டாங்கு
தொடிநெகிழ்ப்பாவை பசலையுடுத்து
எல்லையும் மதியும் முல்லையும் மறந்துபு
பெரும்பேய் ஊழி ஊர்ந்தனள் மன்னே.
கூர்நடுங் கங்குல் துயில் மடிந்தன்ன‌
அடர்இருள் நீள்வனம் செலவினன் எண்ணி
நெடுமூச்சுக் கண்ணியின் விடுமூச்சு பயின்று
இறந்தாள் பிறந்தாள் பிறந்திறந் திருந்தாள்
மண்ணும் வானும் மரனும் மரபும்
உண்ணலும் உடுத்தலும் ஆயநினை விறந்தாள்.
தூங்கார மரத்து தூங்கிய பழம்போல்
கனவின் கொடுஞ்சிறைப் பட்டனள் போலும்
தண்ணிய படப்பை அவன் ஆரெழில் அகலம்
தோயக்கிடந்தாள் ஆயிழை ஆங்கே!

============================================================
24.11.2017 ல் நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக