வெள்ளி, 26 அக்டோபர், 2018

வாழ்க ஓட்டுகள்.




வாழ்க ஓட்டுகள்.
===============================================ருத்ரா




தீர்ப்பு.
மூச்.
இதைப்பற்றி ஒன்றும்
சொல்லக்கூடாது.
நம் ஜனநாயகத்தைப்பற்றி
நாம் சொல்லிக்கொண்டே இருப்போம்.
ஆண்டாண்டு காலமாய்
இதற்கு உயிர் இருக்கிறது என்றும்
அது குடை விரித்து
நம்மைக் காத்து வருகிறது என்றும்
சொல்லிக்கொண்டே இருப்போம்.
நம் உரிமைகளும் கடமைகளும்
நம் பொருளாதாரமும்
நம் நியாயாலயங்களும்
நம் சட்டம் சமைக்கும் கூடங்களும்
நம் குரல்களும்
நம் எதிர்க்குரல்களும்
நம் சாதிகளும் மதங்களும்
நமக்கு நன்கு உயிரூட்டி உரமூட்டி
நம்மை மேலும் மேலும்
மலர்ச்சி யடையச்செய்கிறது என்றும்
எக்காளமிட்டுக் கூறுவோம்.
அட..
என்னய்யா சொல்றீங்க.
ஜனநாயகத்தைக்காப்போம்னு
கம்பு தடிகளோடு வந்து
தேர்தல் தேர்தலாய்
மிதி மிதின்னு மிதிச்சுட்டுப்போய்டுறீங்களே!
கரன்சில காய் நகர்த்தும்
அந்த சதுரங்க கட்டங்களில்
காணாமலேயே போயிடுறீங்க!
அப்புறம் நீங்க
எத்தனைப்பக்கத்துலே
எந்த எந்த ஷரத்துன்னு
நூத்துக்கணக்கா பக்கங்கள அவங்க
எழுதி வாசிச்சத வச்சு
என்ன பண்ணப்போறீங்க?
ஜனநாயகம் காப்போம்னு வீரமா
இந்த செத்த பாம்பையே
அடிச்சு அடிச்சு என்ன பண்ணப்போறீங்க?
கோமாவிலேயே படுத்துக்கிடந்தாலும்
அப்பப்ப
எந்திரிச்சுவந்து
சினிமால வர்றமாதிரி
குத்தாட்டம் போட்டு
கோமாளித்தனங்கள் பண்ணும்
நம் ஜனநாயகம்
உண்மையிலேயே
உலகத்திலேயே
பெரிய ஜனநாயகம் தான்!
வாழ்க நம் ஓட்டுகள்.
வாழ்க வாழ்க அவர்களின்
ஒட்டுண்ணி சீட்டுகள்!

========================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக