செவ்வாய், 23 அக்டோபர், 2018

ரஜனியும் மக்கள் மன்றமும்



ரஜனியும் மக்கள் மன்றமும்
===========================================ருத்ரா

இப்போது தான்
என் கொலுப்பொம்மைகளை
அடுக்கிக்கொண்டிருக்கிறேன்.
இதற்கு நிச்சய‌ம் உயிர் கொடுத்து
உலவ விடுவேன்.
"இன்று ரொக்கம் நாளை கடன்"
எனும் பலகை தான்
இப்போது வரை தொங்கவிட்டிருக்கிறேன்.
அந்த "நாளை"எப்போது வருமோ
அப்போது
மக்கள் கடன் செய்யக்காத்திருக்கிறேன்.
ரசிக மன்றத்து கடமை
படம் பாக்கிறது.
மக்களிலிருந்து
மக்கள் மன்றம்  முளைக்கப்போறது
சமுதாயக்கடமை.
போய் குடும்பத்துக்கு
உப்பு புளி மிளகாய் எல்லாம்
வாங்கிக்கொடுத்து
கடமையாற்றுங்கள்.
மீ டூ  வெறும்
பொம்பளைங்களோட புலம்பல் இல்ல.
பூவுக்குள் பூகம்பங்கிற
சினிமா வசனமும் இல்ல,
இயற்கையே இனிமே
பூவுக்குப் பதிலா
பூகம்பமாகவே  பூக்கும்.
குத்தாட்டம் போடறதுக்காக
போடுற டியூன் இல்ல இது.
ஆனாலும் இந்த பூகம்பம்
சமுதாயம் எனும்
கட்டிடத்தை தரை மட்டம்
ஆக்கி விடக்கூடாது.

சுற்றி
தீ எரிகிறது.
எனக்குத் தெரியும்.
அணைக்கப்பட வேண்டிய நேரத்தில்
கட்டாயம் அணைக்கப்படும்.
என் ஆன்மீக அரசியல் இப்போது
உங்களுக்கு புரிந்திருக்கும்.
நீதிமன்றமும் மதிக்கப்பட வேண்டும்
ஐதிகமும் காக்கப்பட வேண்டும்.
தாமரை இலையும் இருக்கவேண்டும்
அதில் தண்ணீர் ஒட்டவும் கூடாது.
எல்லாம் தாமரைப்பூ பார்த்துக்கொள்ளும்.
இப்ப‌
"பேட்ட"யில் தூள் பறக்கும்.
"பேட்ட துள்ளல்" கொடி பறக்கும்.
அந்தக்கொலுவை நீங்க எல்லாரும்
பாக்கணும்.
அதை கையிலே புடிக்கமுடியாதுண்ணுதான்
நம்ம "சக"பாடியும்
"நாளே நமதே"ண்ணு  பாடுறாரு.
குருட்சேத்திரம் கண்டிப்பா நடக்கும்.
பொம்மை ரத்தம் ஓடினாலும்
அந்த பொம்மை விடியலின்
"நாளை" நிச்சயம் வந்தே தீரும்.

=======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக