செவ்வாய், 2 அக்டோபர், 2018

சமுதாய கட்டாயங்கள்


சமுதாய கட்டாயங்கள்
=================================================ருத்ரா


அறிவு
காட்டு மனிதன் கண்ட‌
முதல் ஆயுதம்.
அறிவு தோன்றும் முன்னரே
தோன்றியது
பயம்.
அதன் பிற வடிவங்களே
கடவுள்.. பக்தி...மதம்.. முதலியன.
அறிவு
மதத்தைப்போல்
கடவுளோடு முற்றுப்புள்ளி வைத்து
மடங்கிப்போவதல்ல.
அறிவின் வளர்ச்சியின்
உச்சமே பகுத்தறிவு.
அது விஞ்ஞானம் (சிறந்த அறிவு)ஆன போது
மனித சமுதாயம் முன்னேற்றம் கண்டது.
சமுதாயத்தைப் பற்றிய
பகுத்தறிவே
ஆணும் பெண்ணும்
சமூக நீதியில்
சமத்துவம் அடைவது.
பக்தி எனும் சம்பிரதாயங்கள்
இதற்கு தடைக்கல் இடும்போது
இது
நீதி மன்றம் மூலம்
திருத்தப்படுகிறது.
அப்படியொரு திருத்தமே
பெண்களுக்கான
"சபரிமலை கோவில் செல்லும்"
உரிமை பற்றிய தீர்ப்பு.


மற்ற நீதி மன்ற தீர்ப்புகளை
வாய் மூடி கை குவித்து
அந்த "நீதி மன்ற அவமதிப்பு"க்கு அஞ்சி
மதிப்பு அளிப்பதாக பாவனை செய்யும்
இந்த ஆணாதிக்கம்
இந்த தீர்ப்புக்கு மட்டும்
ஆவேசமாக கொதித்து
அவமதிப்பு பற்றி கொஞ்சமும்
கவலைப்படாமல்
கருத்துகள் கொப்பளிக்கப்படுகின்றனவே
இது தான் உச்ச பட்சமான இரட்டைவேடம்.

அந்த தொலைக்காட்சியில் ஒருவர்
ஆவேசமுற்று கூறியதைப்பார்த்தால்
இந்திய அரசியல் சட்டபுத்தகமே
அவர் கையில் பட்டால்
சுக்கு நூறாய் கிழித்தெறியப்பட்டுவிடும்
போலிருக்கிறது.
இவர்களுக்கு
ஒரு கோயில் கட்டப்படுவதற்கு
மட்டும் பக்தி வேண்டும்.
இன்னொரு கோயில் இடிக்கப்பட‌
கடப்பாரைகள் போதும்!

கோவிலுக்குள் வர
எனக்கும் உரிமை உண்டு
என்கிறாள் பெண்.
தீர்ப்பு அதை தருகிறது.
அதற்காக அவளை
மலை ஏற்றிப்பார்த்துவிட்டுத்தான்
மறுவேலை
என்று அடம்பிடிப்பதோ
அல்லது
"பாருங்கள்
இந்த கடல் பூமியை விழுங்கப்போகிறதா
இல்லையா" என்று
கறுவுவதோ
எந்த வகையிலும்
கண்ணியமானது அல்ல.
கோயிலுக்குள் போக வேண்டும்
என்று உரிமை இருப்பது போல‌
கோயிலுக்குள்
போகாமல் இருப்பதற்கும்
அவளுக்கு உரிமை இருக்கிறது
மற்ற ஆண்களைப்போல.
உரிமைகள் நிறுவபடுவது
சமுதாய கட்டாயங்கள் ஆகும்.

==================================================ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக