செவ்வாய், 30 அக்டோபர், 2018

தீபாவளி வருகிறது.


தீபாவளி வருகிறது.
=============================================ருத்ரா

தீபாவளி வருகிறது.
நரகாசுரனுக்காக‌
பட்டாசுகள் வருகின்றன.
சந்தோஷம் வெடிக்கிறது.
புத்தாடை இனிப்புகளில்
எங்கும்
சந்தோஷம் சந்தோஷம்.
மக்கள் தொகையின் அடர்த்தி
அந்த வியாபாரங்களில்
தெரிகிறது.
யார் அந்த நரகாசுரன்?
நம்மை எதிர்ப்பவனா?
நம்மில் ஒருவனா?
கடவுள்
சர்வ வல்லமை பொருந்தியவர்.
நரன் எனும் சாதாரண மனிதன்
எப்படி
கடவுளை எதிர்க்கும் அசுரன் ஆனான்?
விஷ்ணுவின் அம்சமே நரகாசுரன்.
விஷ்ணு தன்னைத்தானே
சக்கரம் விட்டு பிளந்து கொள்வதன்
ரகசியம் என்ன?
.................
....................
எதிரே "டொய்ங்..டொய்ங்க்.."என்று
துந்தணாவை
நிமிண்டிக்கொண்டு
நாரதர் வந்தார்.
"பிரபுவே ரகசியம் என்ன?
அவன் பயங்கர உருவம் எடுத்து
மக்களை வதைத்ததால் தானே
அந்த வதம்"
என்று கேட்டேன்.

"ஓய் ..கிட்ட வாரும் சொல்றேன்"
அவர் என் காதைக்கடித்தார்.
"அதெல்லாம் இல்லை.
நீரும் நானும் ஒண்ணுதானே
ரெண்டு பேருக்கும் ஒரே பிரம்மம் தானே
அப்படீன்னா நீர் என ஒஸ்தி?
நான் என்ன தாழ்ச்சி?
அப்படீன்னு கேட்டான் பாருங்கோ"

"அற்ப பதரே !
கம்யூனிசமா பேசுறே ..கம்யூனிசம்?
தொலைச்சுப்போடுவேன் படவா,"ன்னு
விஷ்ணு சக்கரத்தை அவன் மேலே
விட்டுட்டார்"
..........
"ஐயா இத வெளியில சொல்லிப்புடாதீங்க
அப்புறம் இவா எம்மேலேயே
சக்கரத்தை ஏவி விட்டுருவா."
"நாராயணா".....ன்னுட்டு
நாரதர் தப்பிச்சோம் பிழைச்சோம்னு
ஓடியே போய்ட்டார்.

கடவுளை நம்பாதவனே அசுரன்
எனும் நச்சுக்கருத்துக்கு
இந்த மாபெரும் கொண்டாட்டம்
அடையாளமாக ஆக்கப்படவேண்டும்
என்பதே
உள்ளுறைந்து இருக்கும் சூட்சுமம்.
இந்த சூத்திரர்களின் மேல்
சூத்திரர்களைக்கொண்டே
வெடி கொளுத்திப்போடும்
சூத்திரதாரிகளின் புராணதேசத்தில்
"நாலு வர்ண" மத்தாப்புகளே
இன்னும்
கொளுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

====================================================
(கற்பனையை  நகைச்சுவையாய் எழுதியது)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக