புதன், 1 மார்ச், 2023

அகழ்நானூறு 25

 

அகழ்நானூறு 25

______________________________________________

சொற்கீரன்



பாலை வெஞ்சுரம் பாய்திரை அன்ன‌

பரிந்தே ஏகும் நின் பொருள்நசைசெல்வன்

பாலின் வாலொளி எழுதரு மதியம்

கடற்கண்டாங்கு பொங்கும் நின்முகம்

அருவியின் ஆர்த்து அவனை வான் தோய்

மாவலை எழுதகை செய்ய நகைத்தாய்.

சிமயக்குன்றத்து பல் ஒலி தேஅத்து

வழங்கொலி யெல்லாம் தமிழெனக்கண்டு

தேடா செல்வமென செந்தமிழ் ஆண்டு

செவ்விய நம்மொழி தன்னோடு சேர்த்துக்

கொணர்தகை மள்ளன் தேயா மனத்தில்

நகர் நகர் நீங்கி நாகரி மொழியை நம்

இயல்மொழி ஆக்கி பல் மொழித்திரவியம்

உலகோர் வியக்க படைத்தவன் வந்தான்.

அற்றைத்திங்களில் நின் ஆவியும் கலித்து 

அகவல் செய்தக்கால் மஞ்ஞை இனநிரை

மின்னல் மழையென பீலிகள்பெய்திடும்

மகிழ்முன்றில் அணிலாடும் மெல் ஒலி

கீறித்தரும் இன்செய்தி கேள் மெல்லிழையே!


________________________________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக