செவ்வாய், 14 மார்ச், 2023

நான் யார்?


நான் யார்?

___________________________________________



நான் யார் என்று கேள்

என்றான் அவன்.

யாரிடம் என்று சொல்லமுடியவில்லை

அவனால்.

தன்மை

முன்னிலை 

படர்க்கை

இலக்கணங்களுக்குள்ளும்

ஒரு பாம்புப்படுக்கை போட்டுக்கொண்டு

படுத்துக்கொண்டுவிட்டான் அவன்.

நமக்கு படம் போட்டுக்காட்டுவதாய்

ஏதேதோ ஸ்லோகங்ககளின் சுருள்களை 

அடைத்துக்கொண்டு

அந்த ப்ரொஜெக்டரில்

"அவதாரம்"காட்டுகிறான்.

ஹாலிவுட் காரர்கள் காட்டும்

"அவதார் லேசர் பிழிசல்களில்"

வர்ணங்கள் உண்டு.

ஆனால் "வர்ணாசிரமங்கள்" இல்லை.

அந்த வெள்ளைக்காரர்களிடம்

விஞ்ஞானத்தின் பிரமிப்பு உண்டு.

இந்த வெள்ளைக்காரர்களிடம்

அஞ்ஞானத்தின் இருப்பு மட்டுமே

இன்னும் இன்னும் மிச்சம்.

பெரும்பான்மையான மக்களுக்கு

பக்தியின் பந்தி மட்டுமே உண்டு.

அடிமையாய் அழுந்தி இவர்கள்

அழிந்து போவதற்கு மட்டுமே 

இவர்களுக்கு எல்லாம்

பரிமாறுவதாய் 

பாசாங்கு காட்டுகிறார்கள்.

அவர்களின் "மார்பில் குறுக்காய்" ஓடும்

அந்த பூமத்தியரேகையில்

ஒரு நாள் 

இவர்களின் எரிமலை ஸ்பரிசத்தால்

அந்த அழுக்குகள் எல்லாம் எரிந்தே போகும்.

__________________________________________________

ருத்ரா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக