திங்கள், 6 மார்ச், 2023

அயோத்தி

 


அயோத்தி

_______________________________________

ருத்ரா




மனிதம் இல்லாத மதம்.

மதம் இல்லாத மனிதம்.

இந்த இருதுருவங்களுக்கு

இடையே

குழந்தையும் தெய்வமும் 

சின்ன செப்பு விளையாட்டு 

விளையாடிக்கொண்டிருக்கிறது.

பெயரில் என்ன இருக்கிறது.

அப்துல் மாலிக் என்பதில்

இந்தியாவின் இதய நரம்புகள்

ஒரு அம்மா ஒரு அப்பா ஒரு குழந்தையாக‌

பின்னிக்கொண்டு

அன்பின் பிரளயத்தை பதியமிடுகிறது.

குழந்தையின் பசியை ஒரு தாய்

வெறும் நசுங்கிய தட்டும் 

சில சோற்றுத்திரள்களுமாகவா

பார்க்கிறாள்?

அந்தக்குழந்தையும் அந்த‌

கவளத்தை 

ஒரு காமிராகோணம் கொண்டா

பதித்தீயின் சுவாலையை

லேசர் படுத்தி சீன் காட்டுகிறது?

இல்லை.இல்லை.

உணர்வுகள் உரிக்கும் உள்ளத்தின்

உள் பூஞ்சையான மெல்லிய நுங்கின்

கண் கசிந்த நீராய் வழிவதை

காட்டுகிறது.

வால்மீகியோ? துளசிதாஸரோ?

நிச்சயம் அந்த அயோத்தியை

ஒரு புல்டோசர் பட்டினமாகவா

வர்ணித்திருப்பார்?

மக்களை வருடும் அன்பின் பீலிகள் தானே

அயொத்தியின் நகரமெங்கும்

தூவிக்கிடப்பதாக 

ஓலைச்சுவடிகளில் அந்த‌

ஒலிச்சுவடுகளை பதித்திருப்பார்.

இருப்பினும் கடப்பாரைகளின்

தூசிப்படலம்

தமக்குள் பேசிக்கொன்டன.

வேடர்கள் வில் அம்பு தூக்கவில்லை.

சொல்லம்பு கொண்டு 

நம் மன சாட்சிகளை துளைத்திருக்கிறார்கள்.

இந்த அரசியல் வேடர்கள் ஏன்

கசாப்புக்கடைகளுக்கு 

பளிங்குத்தூன்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்?

அயோத்தி படம் 

இப்படி எதுவுமே நம் மனதைத்தைக்கும்

துரும்புகளை வீசவே இல்லை.

இருப்பினும் படம் முழுவதுமே

ஒரு "பீஷ்மர் அம்புப்படுக்கை"தான்.

குத்திகுத்தி இரத்தவிளாறுகளில்

கங்கையும் சில்லறை சில்லறையாய்

அழுது தீர்க்கிறாள்.

அந்த இஸ்லாமியப்பாத்திரம் முழுதும்

மனித அன்பியலின் 

இந்து மகா சமுத்திரம்

வழிய வழிய அலை விரிக்கிறது.

இயக்குநர் மந்திரமூர்த்தி

இந்திய மண்ணின் துடிப்புகளுக்கு

ஒரு துல்லியமான "ஸ்டெதெஸ்கோப்பை"

கையில் வைத்திருக்கிறார்.

அதன் பெயர் அயோத்தி.


_________________________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக