ஞாயிறு, 26 மார்ச், 2023

தேன்பிரளயம்


"அன்பே என் ஆரமுதே..."
சீர்காழி கோவிந்தராஜன்‍...ஜிக்கி.

இது பாட்டா? இந்த தேன்பிரளயம் என்னை எத்தனையோ தடவை புரட்டி புரட்டி போட்டு விட்டது. திருப்பி திருப்பி எத்தனை தடவை கேட்டிருப்பேன் என்று துல்லியக்கணக்கெல்லாம் போட்டுக்கொண்டிருக்க முடியாது. அந்த நேரத்தில் அந்த மெட்டின் இனிமை துள்ளும் அரும்புமுனை சடக்கென்று மொத்த பிரபஞ்சத்தையும் என் மீது கவிழ்த்து திக்குமுக்காட வைத்து விடுமே. சுவரில் வட்டவட்டமாய் தயிர்க்காரி பொட்டுவைப்பாளே அவளிடம் தான் எத்தனை தடவை என்று கேட்க வேண்டும். அவள் சொன்னாள். அய்யா நீங்களே வந்து பாருங்கள். அந்த புள்ளிகள் தெரியவில்லை. எங்கும் எறும்புகள் எறும்புகள் எறும்புகள்! இன்னும் இன்னும் அங்கு ஜிக்கியும் சீர்காழி கோவிந்தராஜனும் புதிருக்குள் வராமலேயெ புதிராய் இருக்கும் அந்த இனிப்பின் உயிர்ப்பு ஒலியை பிழிந்து கொண்டே இருக்கிறார்கள்.
_________________________________________________ சேயோன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக