வியாழன், 16 மார்ச், 2023

ஈசல்கள்

 


ஈசல்கள்

_______________________________________

ருத்ரா



பீதிஅடைந்த 

மக்கள் கூட்டம்

என்று பொருள் படும் 

ஒரு இந்திப்படம் 

வர இருக்கிறது.

அன்பான மக்களே

உங்கள் மொழி எனும் 

அசிங்கமான ஆடைகளையெல்லாம்

களைந்து எறிந்துவிட்டு

நம் இந்தியாவின் நிர்வாணத்தை

தரிசியுங்கள்.

ஆட்கொல்லி வைரஸ் ஒன்றுக்குள்

அடைபட்டுப்போன நம் 

பிரமாண்ட ஜனநாயகம்

மிரண்டு போன பூனைக்குட்டிகளின்

கூட்டமாக 

பரிணாமம் அடைந்த இந்த அவலம்

ஒரு படமா? பாடமா?

நம் கடவுள்கள் நம் ஸ்லோகங்கள் எல்லாம்

எங்கோ பொய்மைச்சேற்றில்

மரவட்டைகளாய் சுருண்டு கிடக்க‌

பயமும் பீதியுமே

நம் பொருளாதாரத்தின் மூலதனமும் சந்தையுமாய்

கோர முகம் காட்டுவதை

புரிந்து கொள்ளும் கூர்மை

இங்கே வெளிச்சத்தை கருதரிக்கும் முன்

அந்த வைரஸ்கள் 

சுருட்டும் துணிமூட்டைக்குள்ளும்

அதன் மின் தகன மேடைத் 

தீக்கொளுந்துகளிலும்

அழிந்தே போகும் கொடூரம்

நம்மால் தாங்கிக்கொள்ள இயலாததாய்

இருந்தது.

மக்களே 

உங்களுக்கு சராசரியான ஒரு

சிறு அரசியல் கூட 

தெளிவு பெறவில்லையென்றால்

பயம் பீதி கலவரம்

இவை மட்டுமே

கொடியேந்தி கோலோச்சிக்கொண்டிருக்கும்.

விழிப்புணர்வு மட்டுமே

நமது முதல் தடுப்பூசி


___________________________________________________________________






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக