சனி, 18 மார்ச், 2023

இளையராஜா

 இளையராஜா

___________________________________‍

சேயோன்.



இசை எனும் காட்டாறு

அள்ளிக்கொண்டு நகர்ந்த‌

பூக்கள் எல்லாமே அழகு தான்.


அன்றைய வெங்கட்ராமன் ஜி ராமநாதன்

மற்றும் சுதர்ஸன், எம் எஸ் வி ,கே வி எம்

இவர்கள் கூட்டத்தில் இளயராஜா அப்புறம்

ஏ.ஆர் ரகுமான் இவர்கள் எல்லோருமே

இசையை அள்ளி அள்ளி வழங்கியவர்கள் தான்.

இன்னும் விடுபட்ட மேதைகள் எத்தனையோ

பேர்கள் உண்டு.

அவர்களில் இளையராஜா மட்டும்

தனிக்காட்டு ராஜா இல்லை.

அநிருத்தின் இசை நுட்பம் புல்லரிக்க‌

வைக்கிறது.

ரீங்காரமிடும் தேனீக்களின் நோட் களும் கூட‌

கணினியின் கர்ப்பத்துள் அடக்கம் தான்.

ராஜா ராஜா ..

வேறு எங்கும் தூக்காதே கூஜா

என்று நரம்புக்கருவிகளையும் 

பல வித கொட்டுகளையும் வைத்துக்கொண்டு

அவர் தன் வெண்கொற்றக்குடையை

சுழற்றிக்கொள்வதில்

யாருக்கும் பொருட்டில்லை..

இசை ஞானி என்பதே 

அதிகப்படியானது தான்.

அதற்கு மேல் வேண்டுமென்றால்

இமய உச்சிக்கு போய் அவர்

உட்கார்ந்து கொள்ளலாம்.

பாராட்டுக்கவிதையாக‌

எழுதவேண்டும் என்றால் 

அவர் இமய உச்சி சென்றால்

இமயம் கீழே அல்லவா ஒரு

கூழாங்கல்லாய் கிடக்கும்

என்று தான் எழுதவேண்டும்.

அவர் உயரம் அப்படிப்பட்டது!


_______________________________________________









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக