புதன், 15 மார்ச், 2023

"மாக்சிம் கார்க்கி"

 பாட்டாளி வர்க்கம் 

சமுதாயக்கொடுமைகளை

துப்பாக்கிக்கொண்டு 

அழித்து எழுதிய‌

பக்கங்களில் 

சமுதாயத்தின் எழுச்சிபெற்ற‌

உயிர் எழுத்துக்களைத்தூவி

நாவல் மழை பெய்து

மண் எனும் அன்னையின்

அன்பின் சிகரத்துக்கு

மணி மகுடம் சூட்டியவர்.

நாவலா அது?

மக்களின் ஆரிக்கிள் வெண்டிரிக்கிள்

துடிப்புகளின்

அலைப்பிழம்பு அல்லவா அது!

வாழ்க என்றும்

இந்த வையத்தில் எங்கும்

நம் "மாக்சிம் கார்க்கி"


__________________________________________________

ருத்ரா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக