வெள்ளி, 17 மார்ச், 2023

அகழ்நானூறு 31

 அகழ்நானூறு 31

___________________________________________

சொற்கீரன்.




தோகை அலையென திங்கள் மறைக்க‌

அவன் வரூஉம் தடமும் தோன்றாக்கொடும் ஊழ்

கலுழக்கண் அழிந்து பொம்மல் ஓதியும்

நனி நலிவுறவே வாங்கமை பூஞ்சினை 

அயரும் தும்பியும் அதிர் யாழ் முரல‌

அதிரக்கேட்ட கணைக்கால் திண்கேழ்

தமியன் ஆறு செலவின்  பொருள்ஈட்டு

வேட்கை துறப்பவும் அல்லானாகி

கொடுங்கை யாளி கொல்வரிச் சுவட்டின்

பற்றிச் சென்றும் சுரம் படர்ந்தனன்.

அவள் எல்வளை இறைமுனை இற‌ங்கிடும் முன்னே

வேட்டுவன வேட்டபின் விரை பரியும் மன்னே.


_____________________________________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக