வெள்ளி, 31 மார்ச், 2023

புள்ளி



உங்களுக்கு தெரியுமா?

ஆணைப்படைத்த 

ஆணவ இறைவன்

அகமகிழ்ந்து கொள்ளுமுன்னே

அதிரடியாய் பதிலடியாய்

பெண்ணே முதலில் வந்து

வாசல் திறந்தாள்.

இவளின் தொப்பூள் கொடியே

இன்னும் 

அறுபடவில்லை

அறுபட‌வில்லை

அந்த இறைவனின் 

தொப்புள் புள்ளியில்.


__________________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக