வியாழன், 9 மார்ச், 2023

அகழ்நானூறு 28



அகழ்நானூறு 28

___________________________________________

சொற்கீரன்.


பனைமருள் எருத்தின் பல்வரி இரும்புலி

நனைந்தலைக் கானத்துக் கடமா தொலைச்சிய‌

செங்குருதி மன்றில் சூர்நிழல் தூஉய்

துன்னிய வெஞ்சுரம் அஞ்சாது ஆர்த்து

பெருகல் பல கல் அத்தம் கவலைய‌

ஆறுகள் நீந்தி பொருள்வயின் செலவின்

அன்ன அஃது அன்று ஈது கொல் அமர் கங்குல்

எல் ஊர் எறிந்து ஆநிரை கவரும் 

அடல் அம்பு மழையின் ஊடும் ஊர்ந்து

நின் நீள் இரவு தோற்றும் நகை நறவு முகைக்கும்

நின் பூவின் பொறிபடு சுணங்கிற்கும் தப்பாது.

நெறிஅவிழ் வழியின் பிழைத்த கலிமா

குறிஅற்று பலவாய் குன்றுகள் இடறும்

வெள்ளிய முளைத்த குணக்கீற்று ஒளியின்

விளிம்புப் போழ்தின் நடுந‌னி வீழ்ந்து 

நின் முறுவல் குறியே எய்துவன் என்னே.


____________________________________________________







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக