வியாழன், 9 மார்ச், 2023

அகழ்நானூறு 27


அகழ்நானூறு 27

_____________________________________________

சொற்கீரன்.


பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன‌

சேயுயர் சினையை மாச்சிறைப் பறவை

கல்லெறிந்தாற் போல் காரின் குழைதரு

மஞ்சு இனமென வான் திரை கிழிக்கும்

சூர்கலி கொல் இருள் அஞ்சுரம் ஆரும்

அகலம் கிளர்தர ஆற்றுப்படூஉம் 

அடுபோர் மள்ளன் என்னாது என்னை

இமைச்சிறை பூட்டி விழிக்குள் வீழ்த்தும்

அன்னவள் கண்சுரம் ஆற்றுப்படையின்

தண்ணிய நிழலிய நீளிடை புகுவன்

விரைதி விரைதி கொய்சுவற்புரவியின்

கொள்மொழி பேசு கதழ்பரி அஃதின்

பூங்குழியும் ஈண்டு புயல் கரு பூக்க‌

நின் கால்விரல் எழுதி காலும் வெரூஉம்

கடுவிசை ஓம்பு காலம் ஈண்டு

பெருங்கல் மறிக்கும் வழியினை உடைப்பாய்

அவள் சில்பூ விழி இங்கு சீர்த்தவிடத்து.


________________________________________________________






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக