வியாழன், 2 மார்ச், 2023

தூய தமிழர்கள்

 பிராமணர்கள் தான் தூய தமிழர்கள் என்றும் அவர்கள் தான் மற்ற மொழிக்காட்டுவாசிகளை (நீசர்கள் அல்லது மிலேச்சர்கள்) தமிழர்களாக ஆக்கினார்கள் என்றும் ஒரு கருத்தை ஒரு சங்கி அன்பர் விதைத்திருந்தார். அப்படியென்றால் சமஸ்கிருதம் எனும் செயற்கை மொழியையும் அதன் சார்வாய் வந்த இந்தி மொழியையும ஏன் தேசிய மொழி என்று திணிக்க வேண்டும்.இந்தியாவின் மூல மொழியான தமிழைத்தானே அவர்கள உயர்த்தி இருக்கவேண்டும்.அதை விட்டு தமிழை கைபர் போலன் கண்வாய் வழியே வந்ததாய் வாய் கூசாமல் பொய் உரைக்கவேண்டும்.தமிழை வைத்து திராவிடத்தை தாக்குவதும் ஆரியத்தை பெயர்குறிப்பிடாமலேயே தமிழ் போல் காட்டி இந்துத்துவாவை இடையிலே செருகி அதைக்காப்பதே நாம் கடைப்பிடிக்கும் தர்மம் என்றும் அதன் மூலம் பிராமணர்கள் கடவுளுக்கு சமம் என்றும் மற்ற சாதிகள் எல்லாம் அவர்களுக்கு அடி பணிவதே வைதிக தர்மம் என்றும் ஒரு "குழப்பியல்"வாதம் பேசுபவர்கள் தான் இந்த பிராமண எதிர்ப்பு வாதத்தை தகர்க்கவந்த வீரர்களாக பாசாங்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே பிராமணர்கள் தான் தூய தமிழர்கள் என்றால் இந்த "உயர் சாதி அடையாள் நூல்" அவர்கள் உடம்பில் உறுத்திக்கொண்டு அல்லவா இருக்கவேண்டும்.அதை அவர்களே மனம் உவந்து நீக்கியிருக்க வேண்டும். மகாகவி பாரதியார் இதை இன்னொரு கோணத்தில் முயன்றார்.அதாவது கீழ் சாதியையும் உயர் சாதி ஆக்கிக்காட்டுவது.அதற்கு ஆதிக்க பிராமணர்கள் தடையாய் இருந்தார்களே.இந்த அடையாளங்களை அகற்றிவிட்டு எல்லோரும் தமிழர் என்று முரசு கொட்டுவோமே பாரதியின் கனவுப்படி.இதையே "நாக்பூர்"ஆட்சிக்குழு அஜெண்டா ஆக்க வேண்டியது தானே.இதையெல்லாம் நினைப்பதே மகாபாவம் என்று எல்லா பெரியவாக்களும் யாகம் வளர்ப்பது மட்டும்தானே இந்துத்துவா.இந்த போலி மனப்பான்மைகள் தவிடு பொடியாக்க வந்ததே திராவிட(த்ரமிள  அல்லது தமிழ் மாடல்) ஆகும். இதனோடு சமஸ்கிருத இந்தி ஆதிக்கங்கள் தான் குழப்பம் செய்கின்றன.இது தவிர்த்த இந்திய மூல மொழிகள் எல்லாம் தமிழ் வழிவந்தவையே.இந்திய நாகரிகத்தை சமஸ்கிருதப்படுத்த‌அவர்கள் செய்யும் தந்திரங்களை முறியடிக்கும் ஒரே மொழி இப்போது தமிழ் மொழியே.ஏனெனில் இது ஒன்று தான் தன் மூல வடிவத்தில் அதாவது நான்கு வர்க்க ஒலிப்புகள் எனும் சமஸ்கிருத வடிவம் இல்லாமல்) இருக்கிறது.

____________________________________________________________________ருத்ரா








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக