வெள்ளி, 24 மார்ச், 2023

முரண்பாடு

 


எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்.

கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால்

மனிதரையும் மற்ற எல்லா உயிர்களையும் 

படைத்திருந்தால்

மேலே சொல்லிருக்கும் நோக்கம் மட்டுமே தான்

முதலில் தோன்றியிருக்கவேண்டும்.

எல்லாம் இன்பமயம் 

என்று கருத்து வடிவம் பெற‌

அடிப்படையாய் இருப்பது 

மக்கள் மற்றும் எல்லா உயிர்களும் தான்.

மக்கள் மயம்.இன்பமயம்

இரண்டும் இழைந்த ஒரு வடிவத்தை

அந்த கடவுள் படைத்திருப்பார் என்று கொள்வோம்.

இப்போது அவருக்கு

சலிப்பு தட்டி போயிருக்கலாம்.

ஒரு சிறு வேறுபாட்டை சொருகி வைத்திருக்கலாம்.

இப்போது அதை உற்றுப்பார்க்கிறார்.

ஏதோ அங்கே சூடு பிடித்திருப்பதாக தெரிகிறது.

எங்கோ இன்பம் அதிகமாகவும் 

அல்லது துன்பம் அதிகமாகவும்

ஒரு மேடு பள்ளம் உண்டாயிருப்பதாக உணர்கிறார்.

அதாவது அவருக்கே அதுவரை புரிபடாத‌

ஒரு நிலைப்பாட்டைப்பார்க்கிறார்.

அதுவே முரண்பாடு.

அது அவரை எதிர்த்து வினவுகிறது.

அதற்கு அவரால் பதில் எதுவும் சொல்லமுடியவில்லை.

இருப்பினும் ஒரு பதில் உருவாகிறது.

அதன் விளைவு என்னவென்றால் 

இனிமேல் கடவுள் என்றும் அதற்கு ஒரு சிம்மாசனம் என்றும்

தேவையில்லை என்று புரியப்படுகிறது.

முரண்பாடுகளே அங்கு எல்லாவற்றையும் இயக்குகிறது.

அது வியக்கத்தக்க மாற்றங்களை விளைவிக்கிறது.

ஒரு சமத்தன்மையோடு அந்த முரண்பாடுகளையும் 

பதியம் போட்டு வளர்த்து

ஒரு புதிய நந்தவனமே உருவாகிறது.

ஒரு பெரிய வளர்ச்சி செயற்கையாய் எழுந்து நின்று

ஆட்சி செய்கிறது.

இப்போது தான் கடவுளுக்கு ஞாபம் வருகிறது.

அந்த இடம் வெறுமையாக இருக்கிறதே அதில்

ஏதோ சாந்து போட்டு பூசிவிடுவோம் என்று

அரைகுறையாய் விட்டு விட்டு வந்தோமே

அது இப்போது என்னவாக இருக்கும்?

இப்படி அவரே "கேள்வியில்" விழுந்து நெளிந்தபோது தான்

அறிந்தார்.

ஓ! அந்த க்ரே மேட்டர் ...மூளை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக