வெள்ளி, 17 மார்ச், 2023

முதல்...

   


முதல்...

_____________________________________‍

பரமண்டலத்தான்.




தண்டனையை முதலில் 

செய்து விட்டு

அதிலிருந்தே 

ஒரு முகம் செருகிக்கொண்டு

தரிசனம் தருபவர் தான்

நமக்கு கடவுள்.

ஒரு பக்தன் அப்பாவியாய்க்

கேட்டுவிட்டான்.

மனிதன் தான் பாவத்தின் வாசல்

என்று தண்டனைகளையும் 

கூடவே படைத்து விட்டீர்கள்.

அப்படியென்றால்

மனிதனைப்படைத்தது தானே

முதல் பாவம்.

அதற்கு யார் தண்டனை தருவது?

நீ கடவுள் விசுவாசி அல்ல.

அந்தப்பாவத்திற்கு

நீ மீண்டும் 

மண் ஆகக்கடவது என்றார்.

அவன் கேட்டது பாவமா? அறிவா?

மனிதனின் கேள்வியே

சைத்தான் அல்லது கடவுள் உருவில்

முளைத்த முதல் ஆதிக்கத்தின்

சவப்பெட்டிக்கு அடிக்கப்படும்

முதல் ஆணி.


____________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக