ஞாயிறு, 26 மார்ச், 2023

திருமணவாழ்த்து மடல்

திருமணவாழ்த்து மடல்

_________________________________________________


மணமகன்

செல்வன் ஆ அரவிந்த் சீனிவாஸ்

மணமகள்

செல்வி எம் பெரியநாயகி எனும் மீனா.

திருமண நாள்

27.03.2023

மதுரை

M S MAHAL

Paravai.

_____________________________________________________________________


இல்லறச்சோலை புகுந்திடும் 

அன்பு உள்ளங்களே.

அஞ்சற்க!அஞ்சற்க! 

அஞ்சறைப்பெட்டி உங்களிடம் உண்டு.

இன்பப்பெட்டகமும் அதுவே தான்

அறிவீர்!

இதயம் என்னும் உங்கள் பாஸ்வர்ட் 

திறக்கும் வாசல் எல்லாம் 

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வெள்ளமே.

இது உங்கள் உங்கள் உங்களுக்கான 

இனிய தருணங்களின்

 புத்தகத்திருவிழா.

எழுதுங்கள் படியுங்கள் எல்லாம்

 உங்கள் எழுத்துக்களே.

இனி உங்கள் இலக்கணமும் அதுதான்.

இலக்கியமும் அது தான்.

இல்லற வரிகளின் அன்பும் அழகும் 

அறிவின் கோடும் புள்ளியும் சேர்ந்து

மனம் மகிழ்ந்த மருதானை ஓவியம்

மங்கா ஒளியில் மங்கலம் நிறைக்கும்.

வீடுகள் வெறும் கூடுகள் அல்ல.

நினைத்தால் அங்கு சிறகுகள்

 முளைக்கும்.

வானமும் உயர்ந்து நோக்கிட வெட்கும்

பேரும் புகழும் செல்வமும் நிறைந்திட‌

மக்கட் பேறு எனும் மாணிக்கமும் சுடர‌

நீங்கள் நீடூழி நீடுழி வாழ்ந்திடவே என‌

வாழ்த்திடுகின்றோம்.

வாழ்த்திடுகின்றோம்.

 

_________________________________________


அன்புடன் வாழ்த்தும்


இ.பரமசிவன் & ப.கஸ்தூரி

குடும்பத்தினர்.

ப்ளாட். 628

10 வது தெரு

கற்பகநகர்

மதுரை 625007

________________________________________












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக