வெள்ளி, 17 மார்ச், 2023

எங்கிருந்தோ ஒரு குரல்.

 

 எங்கிருந்தோ ஒரு குரல்.

___________________________________________

"மூளி வர்மன்"



என்னை இது?

இந்த உன் முனை மழுங்கிப்போன‌

காகித அம்புகளா

அந்த சூரியனிடம் முள் தைக்கும்.

பரவாயில்லை.

எங்கோ எவனோ சொல்லியிருக்கிறான்

எல்லாவற்றுக்கும் ஆசைப்படு

என்று.

அது போதி மரத்தடிக்குரல் அல்ல.

ஏதோ ஒரு வியாபாரப்போதை மரத்துக்

குரல் அது.

ஒரு புகழ்ப்போதை

இப்போது

உன் பேனாவையும் காகிதத்தையும்

புண்படுத்தியிருக்கிறது.

உன் காயத்துக்கு நீ

என்ன வேண்டுமானாலும் செய்து கொள்.

ஆறாத புண்ணை எல்லாம் ஆற்றும்

"ஆறுமுகக்"களிம்பு தானே

உன் கவிதை.

உன் நோய் உனக்கு.

உன் களிம்பு உனக்கு.

அது களிம்பு அல்ல களிப்பு.

"இடைப்போலி" என்று

ஒரு இலக்கணக்குறிப்பு எழுதிக்கொள்

அதையும் ஒரு கவிதையாய்.


____________________________________________________

இனி நான் ருத்ரா இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக