திங்கள், 6 மார்ச், 2023

அகழ் நானூறு 26

 அகழ் நானூறு 26

---------------------------------------------------------

சொற்கீரன்.



குணகடல் முகந்த கொள்ளை வானம்  

கமஞ்சூல் குடித்த எழுகடல் வெள்ளம் 

கயிற்றின் இறங்கி அடர்மழை என்ன 

கல்லும் மண்ணும் வேழ மண்டை 

முதிர் மன்றும் அறைந்து ஆற்றிய 

வழிப்படூஉம் சினையுறு அருங்கேழ் 

அம்மர நிரையும் சிதர் பட இறங்கும்.

பானாள் கங்குல் குறி எதிர்ந்து வரூஉம் 

நின் பணைத்தோள் மல்லன் மின் பரி 

ஆங்கு காலம் தாழ்த்து உரறு அதிர் குரல் 

இடித்தன்ன விரையும் விரையும் என்னே.

நின்  எயிற்று இணர் இன்பூச் சொரியும் 

நகை தோய இருட்சுரம் மீள்வன்.

பெருமலை மீமிசை முற்றின முடிச்சின் 

முகிழ் முக வெள்நள் திங்கள் முகைய 

நின் வாள் இலங்கு அருவி இன்பிழி இழியல் 

போதும் அஃதே செம்பொருள் கொள்வன்  என 

கோடாமை கோடமை கொடுங்கை பற்றி 

மீள் தரும் காலென நின் எதிர்ப்படும் மன்னே.


-----------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக