புதன், 8 பிப்ரவரி, 2023

புதிய "பாகவதம்"கேளீர்

 புதிய "பாகவதம்"கேளீர்

_________________________________

ருத்ரா


"இறைவன் முன் 

எல்லோரும் சமம்.

உயர் சாதி என்பது

இல்லவே இல்லை.

சாதிகள் எனும்

பொய்மை

சாஸ்திரம் கூறிய‌

பண்டிதர்களால்

உருவாக்கப்பட்டது.

எல்லா மனிதர்களுக்குள்ளும்

கடவுள் இருக்கிறார்...."

ஆகா!

புல்லரிக்கிறது.

புளகாங்கிதம் அடைகின்றோம்.

அதோ

ஒரு கோபுரம் உயர்ந்து தெரிகிற‌து.

அது

நுரைக்கோபுரமா?

தரைக்கோபுரமா?

காலண்டர் தாள்கள்

உதிர்ந்து முடியட்டும்.

2024ல் தெரியும்.


__________________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக