திங்கள், 20 பிப்ரவரி, 2023

ஒரு பென்சில் முனை.

 


Facebook 



என்ன ஓவியம் இது?

ஒரு பென்சில் முனையில்

சொட்டியது "பிரம்மம்".

படைப்பை சொல்லும் 

பிரம்மம் என்ற சொல் கூட‌

இங்கே அழுக்காகிப் போன போது

அதன் அழகே உயிராகி உருகிய‌

மாயம் இது.

கண்களில் இதழ்கள்.

இதழ்களில் கண்கள்.

உணர்ச்சியின் தளும்பல்

கடல்களாகி கரைகள் உடைத்து

அந்த பென்சில் கூர்மையில்

மௌனத்தின் ரத்தம்

பேசுவது எதனை?


_________________________________________

ருத்ரா





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக