செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது.





இன்று கடிகாரமுட்கள் 

ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும் 

இரவின் நடுவில்

இந்தப்பாடலில் என்னை

இழைத்துக்கொண்டேன்.

என்ன இசை?

தேன் மின்னல் 

வளைந்து நெளிந்து

கிளைகள் பல பிரிந்து

என் மோனத்து வானில்

நுள்ளி நுள்ளித்தந்த‌

இசையில் 

நான் "நானை" நார் உரித்து

என்னவென்று சொல்ல இயலா

பிழம்பு ஆகினேன்.

மிக அருமையான பாடல்.

இன்னும் அந்த‌

மெல்லிய் நுங்கின் ஊசி கொண்டு

தைக்கிறது.

நினைவுப்படுகைகளில்

அருவியின் இனிய‌

ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது.

___________________________________________________

ருத்ரா


time...00.15 AM

date.....15.02.2023



Indru Namathullame

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக