புதன், 1 பிப்ரவரி, 2023

ஏன்?

 


என்ன செய்யப்போகிறாய்?

இது ஒரு சினிமாப்பாடல் வரி.

காதலியை நோக்கி 

தலையை சிலிப்பிக்கொண்டு

பல்லைக்கடித்துக்கொண்டு 

கேட்கும் கேள்வி இது.

ஓ! என்னருமை இளைய யுகமே?

உன் கேள்விகள் எல்லாம்

இந்த முட்டுச்சந்துக்குள் தான்

முடங்கிக்கிடக்கிறதா?

அந்த விளிம்புமுனையில் போய் நின்று

நொறுங்குவதற்குள்

உன்னை முகத்தில் அடித்துவிட்டு

ஓடும் 

அந்த நொடிகளை புறந்தள்ளிவிட்டு

கொஞ்சம் சிந்தனை செய்.

உன்னைச்சுற்றி சுழன்று அடிக்கிறது

நெருப்பின் பெரும்புயல்.

இந்த சமுதாயம் முழுவதுமே

சாம்பல் மேடுகளாய்

எஞ்சி நிற்கப்போகும்

ஒரு நாகரிகப்பேரழிவு

உன் முதுகுப்பக்கம் 

நின்று கொண்டிருக்கிறது.

ஆம்.

என்ன செய்யப்போகிறாய்?

அதே கேள்வி தான்.

நீ மீண்டு கொள்ளவேண்டும்.

இந்த மண்ணை 

இந்த கனவை

இந்த மக்களின்

பேரழிவை

நீ தடுத்தாட்கொள்ளும்

தருணம் இது.

ஏன்?

என்ன ஆச்சு?

இந்த கேள்விக்கும் கூட‌

உன் சுநாமிக்குள் தான்

எல்லாம் இருக்கிறது.

விழித்தெழு!

சிலிர்த்தெழு!

சினந்தெழு!

சீறியெழு!


_________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக