வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

செங்கீரனாக‌...


1 நபர் மற்றும் தாடி இன் படமாக இருக்கக்கூடும்

தோழர் நாராயணன்.

_______________________________________________


நான் 

செங்கீரனாக‌

கவிதைகள் 

எழுதிக்கொண்டடிருந்த நேரம்.

தோழர்! கவிதை அருமை!

என்று புன்முறுவல் உதிர்ப்பார்.

ஞானபீடங்கள் எல்லாம்

தோற்றுவிடும்.

சுதந்திரத்தின் "வெள்ளி விழா"வைப்பற்றி

"தோரணங்கள் ஆடுகின்றன"

என்று நான் எழுதிய கவிதை

"செம்மலர்" இதழில்

தலையங்கமாக பிரசுரம் ஆயிற்று.

இன்றும்

அந்த தோரணங்களில் 

அவர் சிரித்துக்கொண்டிருப்பதாக‌

நான் உணர்கிறேன்.


____________________________________________________

செங்கீரனாக‌...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக