திங்கள், 13 பிப்ரவரி, 2023

(வடி)வேலுச்சாமி.





கடவுள் இருக்கிறாரா?

இருந்தால் மகிழ்ச்சி.

என்று சிந்தனை உதிர்த்தவர்

உலக நாயகன்.

புலி வருது புலி வருது..

என்று

சொற்களும் நம்மை 

துரத்தி வருகிறதா?

வரும் 

ஆனா வராது 

என்று

வடிவேலுவாக‌

திருச்சி வேலுச்சாமி அவர்கள்

சொல்லவில்லை.

அவர் சொல்லில் 

உறுதி கொப்புளிக்கிறது.

புலி வருது புலி வருது...

என்பது

அச்சம் அல்ல.

நமக்கு ஏதோ 

ஒரு பாதுகாப்புக் கேடயம் ஒன்று

உறுமிக்கொண்டு வருகிறது

என்று நம்பிக்கை 

மெலிதாக படர்கிறது.

ஆனாலும் 

உலக மற்றும் உள்ளூர்

இல்லியூமினாட்டிகள்

தமிழன் சுவடு இருப்பதையே

அழிக்க‌

அதுவும் தமிழனைக்கொண்டே

அழிக்க‌

எங்கோ ஒரு

அஸ்வமேத யாகம் நடப்பதன்

பகைப்புகையின் 

கருகல் நாற்றமும்

அதில் தெரிகிறது.

தமிழா!

தமிழ் என்றால் 

மகிழ்!

ஆனாலும் மனதுள்

முகிழ்

உன் முனை முறியா

புறநானூற்றுக்கூர்மையுடன்.

என்றும்

எப்போதும்

வாழ்க வாழ்கவே

தமிழ் நீடு வாழ்கவே


______________________________________________________

ருத்ரா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக