சனி, 25 பிப்ரவரி, 2023

நச்சரித்துக்கொண்டே இருக்கிறீகள்.

 


கையில் ஒரு கைக்குட்டை.

நம் முகத்தை மூக்கை

கைகளை கண்களை

துடைத்துக்கொள்ள.

உங்கள்

உள்ளத்தின் மூலை முடுக்குகளை

உற்றுப்பார்த்திருக்கிறீர்களா?

அதைத்துடைக்க 

புதிய சிந்தனைக்களை

கைக்குட்டையாய் வைத்திருங்கள்.

பழமையை போற்றும் ஒரு வெறியில்

மனிதம் எனும் புனிதம்

புழுதியில் புதைந்திருப்பது பற்றி

என்றைக்கேனும் உங்களை

உறுத்தியிருக்கிறதா?

பிறப்பு எனும் ஒரே வார்ப்பை

பலப்பல குழிகளில் வீழ்த்தி

பல்லாங்குழி ஆடிக்கொண்டே இருப்பதா

சனாதனம்?

சாதிப்படுகுழிகளில்  தள்ளிவிட்டா 

மக்களின் சொர்க்கவாசல்களை 

திறக்கிறீர்கள்?

உங்கள் கனபாட்டங்களில்

காயம் பட்டு நசுங்கிக்கிடப்பது

பிரம்மம் தான் என்பதை

உற்றுக்கவனித்திருக்கிறீர்களா?

ஸ்லோகங்கங்கள்

நகக்கீறல்கள் மற்றும்

கோரைப்பற்களின் சுருதிகள்

ஆனது ஏன்?

மொத்த மக்களும் தீட்டு.

நாங்கள் வெகு சிலர் மட்டுமே

கடவுளின் மடியில் என்று

நச்சு பாஷ்யங்களில்

ஏன் இப்படி 

நச்சரித்துக்கொண்டே இருக்கிறீகள்?

ஆத்திகம்.....

சீழ் வடிகிறது பாருங்கள்.

நாத்திகமே அதற்கு மருத்துவம்.


___________________________________________________

ருத்ரா






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக