ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

இன்றே..இன்றே!

 


கடவுள் தேடி

கற்சிலை நோக்கி

ஓடுகின்றோம்.

அவர் குரல் என்று

பின்னணிக்கூச்சல் போடுபவர்கள்

அவர் சொன்ன தத்துவம்

எங்கோ

புதைத்து விட்டார்.

மனிதனை மனிதன் 

சுரண்டித்தின்பது

மகா மகா பாவம் இல்லையா?

இதை கழுவ‌

ஆயிரம் கங்கைகள் போதாது.

கோடி சுலோகங்களும்

வீணே வீணே.

இதுவே கடவுளின் குரல்.

கேள்மின் கேள்மின்

அவர் குரல் இன்று.

மனிதம் என்ற 

அறிவின் ஒளியே

இருட்டுக்கடல் நீந்தும்.

மற்றவை எல்லாம் 

மடிந்தே போகும்.

தெரிவீர்!தெளிவீர்!

இன்றே..இன்றே!


____________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக