செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

பிறப்பு வழியாக

 


பிரம்மம் பிறப்பு வழியாகத்தான் 

எட்டிப்பார்க்கிறது.

மார்பின் குறுக்கே வந்த ஒரு நூல்

அங்கே வழிமறித்துக்கொண்டு நிற்கிறது.

அப்படியிருந்தும்

கோடி கோடி மனிதர்களாய்

பிரம்மம் பிதுங்கி நிற்கிறது.

அந்த பிரளயத்தை

இந்த வர்ணக்கோடுகளால்

இனி தடை அணை போடவே இயலாது.

மலட்டு மந்திரங்கள்

இந்த பிரம்மத்தின் பிரம்மாண்டத்தை

கருச்சிதைவு செய்துவிட‌

கூச்சல் இட்டுக்கொண்டே இருக்கின்றன.

க்ஷத்திரிய வாளும் ஈட்டியும்

துப்பாக்கியும்

அஷ்டபந்தன கும்பாபிஷேகம் செய்து

இந்த அநீதிக்குத்தான்

வால் பிடித்துக்கொண்டிருக்கின்றன.

பெரும்பான்மை மக்கள்

சிறுபான்மையினரின் 

சூழ்ச்சி மூளைக்குள்

சுருண்டு கிடப்பதே 

சமூக அநீதி என்பது.

இதை அடித்து நொறுக்க வேண்டியதே

தமிழா

உன் நீதி.

உன் எழுச்சி.


_______________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக