சனி, 4 பிப்ரவரி, 2023

ஒரு அஞ்சலி

 


இசைச்சுரங்கத்துக்கு

(வாணிஜெயராம்)

ஒரு அஞ்சலி

_____________________________________________‍

ருத்ரா




ஏழுசுரங்களுக்குள் 

எத்தனை ராகம்?

ராகங்களின் சுரங்கமே

வ்ழி கிடைக்காத 

ஒரு காலச்சுரங்கத்துள்

நுழைந்து விட்டீர்களே.

உங்களைப் பின் தொடர்ந்த‌

அந்த ஒலி அலைகள்

இனி 

பட்டினியில் வீழ்ந்திடுமே!

"மேகமே மேகமே.."

என்று நீங்கள் கூப்பிட்ட‌

உங்கள் அழைப்பில்

கண்ணுக்குத்தெரியாத 

ஒரு தாஜ்மகால்

கவிதையாகி நின்ற அந்த‌

கண்ணீர்த்தளும்பலில்

ஒரு பளிங்கின் சொற்கூடமாய்

சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

எங்கிருந்தோ யாரோ 

சுழற்றி எறிவது போல் வீசிய‌

அந்த இசைத்தூண்டிலில் சிக்கிய 

மீனாய்

உங்களைத்தேடி துடித்துக்கொண்டிருக்கிறது

இந்த தமிழ் நாடு.

ஒரு மரணம் கவிழ்ந்து கிடந்து

கேவிக்கொண்டிருக்கிறது

ஒரு உயரிய 

வீணையை

வீணாக உடைத்து விட்டோமே என்று.

எங்கள் ஆழ்ந்த இரங்கல்களில்

உங்கள் பாடல்கள்

காலமாகாமல்

இன்னும் ஒலிக்கின்றன.


_________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக